
சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜரத்தினம், புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவர் புஷ்பராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை உயர்நீதி மன்றத்தில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது அந்த வழக்கில் கூறப்பட்டுள்ள ஒரு புகாரைப் பற்றி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருப்பது ஒரு பொறுப்பற்ற செயல் என்று நாங்கள் கூற விரும்புகிறோம். அவருடைய அறிக்கையில் அவர் யாரை குற்றம் சாட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் தேர்தல் கமிஷனையும், தேர்தல் அதிகாரிகளையும் குற்றம் சாட்டுகிறார். அவருடைய அறிக்கையை நாங்கள் பொருட்படுத்தவில்லை. அதே நேரத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வரும் பொழுது ஜெயலலிதா ஒரு சாட்சியாக வந்து சாட்சியம் அளிக்க விரும்பினால் அதனை நாங்கள் வரவேற்போம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதி மன்றத்தில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து தேர்தல் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது அந்த வழக்கில் கூறப்பட்டுள்ள ஒரு புகாரைப் பற்றி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருப்பது ஒரு பொறுப்பற்ற செயல் என்று நாங்கள் கூற விரும்புகிறோம். அவருடைய அறிக்கையில் அவர் யாரை குற்றம் சாட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் தேர்தல் கமிஷனையும், தேர்தல் அதிகாரிகளையும் குற்றம் சாட்டுகிறார். அவருடைய அறிக்கையை நாங்கள் பொருட்படுத்தவில்லை. அதே நேரத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வரும் பொழுது ஜெயலலிதா ஒரு சாட்சியாக வந்து சாட்சியம் அளிக்க விரும்பினால் அதனை நாங்கள் வரவேற்போம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment