
இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. இதில் பலியானவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு (2010) நாடு முழுவதும் நடந்த சாலை விபத்துக்களில் 1.6 லட்சம் பேர் இறந்தனர். இது 2009-ம் ஆண்டைக் காட்டிலும் 35 ஆயிரம் பேர் அதிகம் ஆகும். அந்த ஆண்டில் 1.25 லட்சம் பேர் பலியாகி இருந்தனர்.
சாலை விபத்துக்களில் 5 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்கள் அதிகம் பேர் உயிரிழக்கிறார்கள். 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்புக்கு 10 காரணங்களில் சாலை விபத்தும் ஒன்றாக உள்ளது.
நாட்டில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. 2004-ல் பதிவு செய்யப்பட்ட 720 லட்சம் வாகனங்களில் 71 சதவீதம் இரு சக்கரவாகனங்கள் ஆகும்.
போக்குவரத்து அமைச்சகம் 2009-ல் அளித்த அறிக்கையில் 22.4 சதவீத விபத்துக்கள் ஏற்பட இரு சக்கர வாகனங்களே காரணம் என தெரிய வந்துள்ளது. 20.2 சதவீதம் பேர் இரு சக்கர வாகன விபத்துக்களில் சிக்கி காயம் அடைகிறார்கள்.
இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகமும், சாலை போக்குவரத்து துறையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:-
சாலை விபத்துக்கள் அதிகரிக்க மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப் படவில்லை. இதில் அரசியல்விதிகள் போதிய கவனம் செலுத்தவில்லை. இரு சக்கர வாகனங்களின் பெருக்கத்தால் சாலை விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கையும், காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுதோறும் சாலை விபத்துக்களில் 13 ஆயிரம் பேர் பலியாகிறார்கள். சாலை விபத்து இறப்புகளை தடுக்க 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் நேற்று பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளன. “சாலை பாதுகாப்பு 10 ஆண்டு 2010- 2020-ம் என்ற திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உலகிலேயே அதிக அளவில் விபத்துக்கள் நடைபெறும் இந்தியாவில் சாலை பாதுகாப்பு குறித்த எந்த திட்டத்தையும் அரசு முன்வைக்கவில்லை. உலக நாடுகள் நேற்று சாலை பாதுகாப்பு திட்டத்தை அறிவித்தபோது இந்தியா அதை வெள்ளிக்கிழமைக்கு (நாளை) தள்ளி வைத்தது. இப்போது அது இந்த மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2010) நாடு முழுவதும் நடந்த சாலை விபத்துக்களில் 1.6 லட்சம் பேர் இறந்தனர். இது 2009-ம் ஆண்டைக் காட்டிலும் 35 ஆயிரம் பேர் அதிகம் ஆகும். அந்த ஆண்டில் 1.25 லட்சம் பேர் பலியாகி இருந்தனர்.
சாலை விபத்துக்களில் 5 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்கள் அதிகம் பேர் உயிரிழக்கிறார்கள். 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்புக்கு 10 காரணங்களில் சாலை விபத்தும் ஒன்றாக உள்ளது.
நாட்டில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. 2004-ல் பதிவு செய்யப்பட்ட 720 லட்சம் வாகனங்களில் 71 சதவீதம் இரு சக்கரவாகனங்கள் ஆகும்.
போக்குவரத்து அமைச்சகம் 2009-ல் அளித்த அறிக்கையில் 22.4 சதவீத விபத்துக்கள் ஏற்பட இரு சக்கர வாகனங்களே காரணம் என தெரிய வந்துள்ளது. 20.2 சதவீதம் பேர் இரு சக்கர வாகன விபத்துக்களில் சிக்கி காயம் அடைகிறார்கள்.
இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகமும், சாலை போக்குவரத்து துறையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:-
சாலை விபத்துக்கள் அதிகரிக்க மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப் படவில்லை. இதில் அரசியல்விதிகள் போதிய கவனம் செலுத்தவில்லை. இரு சக்கர வாகனங்களின் பெருக்கத்தால் சாலை விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறது. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கையும், காயம் அடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுதோறும் சாலை விபத்துக்களில் 13 ஆயிரம் பேர் பலியாகிறார்கள். சாலை விபத்து இறப்புகளை தடுக்க 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் நேற்று பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளன. “சாலை பாதுகாப்பு 10 ஆண்டு 2010- 2020-ம் என்ற திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உலகிலேயே அதிக அளவில் விபத்துக்கள் நடைபெறும் இந்தியாவில் சாலை பாதுகாப்பு குறித்த எந்த திட்டத்தையும் அரசு முன்வைக்கவில்லை. உலக நாடுகள் நேற்று சாலை பாதுகாப்பு திட்டத்தை அறிவித்தபோது இந்தியா அதை வெள்ளிக்கிழமைக்கு (நாளை) தள்ளி வைத்தது. இப்போது அது இந்த மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
1 comment:
சாலை விபத்து: உலகின் முதலிடம் இந்தியா! இந்தியாவில் முதலிடம் தமிழ்நாடு!!
http://arulgreen.blogspot.com/2011/05/blog-post_12.html
Post a Comment