Thursday, May 12, 2011

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் காய்கறி விலை மீண்டும் உயரும் அபாயம்.


கடந்த மாதம் சற்று விலை குறைவாக இருந்த காய்கறிகள் மீண்டும் விலை உயர்ந்து வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரே வாரத்தில் 10 முதல் 15 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. வழக்கமாக தினமும் 500 லாரிகளில் கோயம்பேட்டுக்கு காய்கறிகள் வரும்.

ஆனால் இப்போது 250 லாரிகளில் மட்டுமே வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடுமையான வெயிலால் காய்கறி விளைச்சல் குறைவே தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் எதிர்வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியமான பொருட்களின் விலைகள் உயரும் நிலை உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியமான பொருட்களின் விலைகள் உயரும் என்பது மத்திய, மாநில அரசாங்கத்திற்கு தெரிந்த உண்மை.

அதே நேரம் பெட்ரோல், டீசல் விலை குறைந்தால் விலைவாசியும் கணிசமாகக் குறையும் என்பதும் தெளிவு.

தேர்தல் முடிவிற்கு பின் மத்திய அரசாங்கம் மீண்டும் தனது விளையாட்டை துவங்கவுள்ளது.

மக்களின் முன்னால் அமைதிகாக்கவோ அல்லது வேறு காரணங்கள் சொல்லவோ நமது பிரதமரும் அவர்தம் சகாக்களும் தயாராகிவிடுவார்கள்.

எதிர்கட்சிகளும் போராட்டம், எதிர்ப்பு என்று களம்காணும்.

ஆனால் மக்கள் தம் சட்டைப் பையில் உள்ள காசுகளை செலவழித்து திணறுவர்.

அதற்குள் அடுத்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு வந்துவிடும்.

மறுபடியும் ஆரம்பத்தில் இருந்து தொடங்கவேண்டும்.

No comments: