Thursday, May 12, 2011

அமெரிக்கா மீது விரைவில் தாக்குதல் நடத்துவோம் ; அல்கொய்தா மீண்டும் எச்சரிக்கை.

அமெரிக்கா மீது விரைவில் தாக்குதல் நடத்துவோம்; அல்கொய்தா மீண்டும் எச்சரிக்கை

பின்லேடன் கொல்லப்பட்டதால் அல்கொய்தா இயக்கத்தினர் கடும் கோபத்தில் உள்ளனர். பழிக்கு பழி வாங்க விரைவில் தாக்குதல் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் அல்கொய்தா இயக்கத்தின் ஏமன் பிரிவு மீண்டும் ஒரு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

அல்கொய்தா மூத்த தலைவர்களில் ஒருவரான நசீர்-அல்-வகிஷி இணையத்தளம் ஒன்றில் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

எங்களது புனித போர் ஓய்ந்து விடவில்லை. இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்கர்களுக்கு எதிராக மிகப்பெரிய போர் நடத்தப்படும். பின்லேடனை கொன்று விட்டதால் எல்லாம் முடிந்து விட்டதாக அமெரிக்கர்கள் முட்டாள் தனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

விரைவில் நாங்கள் நடத்தப்போகும் புனிதப் போர் மிகப் பெரியதாகவும் மோசமானதாகவும் இருக்கும். இதற்காக அமெரிக்கா காத்திருக்கிறது. இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

அதன் பிறகு புனிதப் போர் தாக்குதல்கள் அணிவகுத்து வரும். பின்லேடன் மரணம் மூலம் எங்களது புனிதப் போர் பணி தீவிரம் அடைந்துள்ளது. இவ்வாறு அந்த எச்சரிக்கை தகவலில் கூறப்பட்டுள்ளது.

No comments: