Thursday, May 12, 2011

நாட்டுக்கோழி இறைச்சி ருசியாக இருப்பது ஏன்?

நாட்டுக்கோழி இறைச்சி ருசியாக இருப்பது ஏன்?; கால்நடை அதிகாரி தகவல்

பிராய்லர் கோழிகறியைவிட நாட்டுக்கோழியின் கறிக்கு அதிக மவுசு உள்ளது.

தொழில்ரீதியாக கூண்டு முறையில் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு நோய்த்தடுப்பு முறைகளும் கச்சிதமாக பின்பற்றப்படுகிறது.

கிராமப்புறங்களில் சாதாரணமாக நாட்டுக்கோழிகள் வளர்ப்பது சகஜமாக உள்ளது. நாட்டு கோழிகளை சமைப்பதால் ஏற்படும் மணமும், ருசியும் இறைச்சி சாப்பிடும் நான்வெஜ் பிரியர்களை வெகுவாக கவர்ந்திழுக்கின்றன.

இதனால் நாட்டு கோழிகளை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு மக்கள் தயங்குவதில்லை. இயற்கையிலேயே நாட்டு கோழி கறியின் சதைப்பகுதியில் உள்ள திசுக்கள் ருசியாக இருக்கும்படி அமைந்துள்ளன.

மேலும் வெளியே சென்று குப்பைகளை கிளரியும் நிலக்கழிவுகளையும் பச்சை புல்லுடன் சேர்த்து சாப்பிடுவதால் நாட்டுக்கோழியின் கறி சமைக்கும்போது வாசனையை பரப்புகிறது.

இதனால் நாட்டுக் கோழிக்கறி தனி மவுசுடன் மற்ற கோழிகளின் இறைச்சியை விட முதலிடம் பெறுகிறது. நாட்டுக்கோழி கிலோ ரூ.250. இதனால் பெரும் கிராக்கியுடன் விற்கப்படுகிறது.

No comments: