Thursday, May 12, 2011

ஸ்கேனில் பெண் குழந்தை என்று தெரிந்ததால் கர்ப்பிணி மனைவியை கொன்ற தொழிலாளி ; ஆஸ்பத்திரிக்கு சீல் வைப்பு.

ஸ்கேனில் பெண் குழந்தை என்று தெரிந்ததால்    கர்ப்பிணி மனைவியை கொன்ற தொழிலாளி;     ஆஸ்பத்திரிக்கு சீல் வைப்பு

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் பழையாகரத்தை சேர்ந்தவர் பிரகாஷ். நகை தொழிலாளி. இவரது மனைவி சுரேகா. இவர்களுக்கு காவ்யா (5), ஸ்வீட்டி (3) என்ற மகள்கள் உள்ளனர். இதனால் பிரகாஷ் ஆண் குழந்தை பெற விரும்பினார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு சுரேகா 2 முறை கருதரித்தார். அப்போது அங்குள்ள பவன் நர்சிங் ஹோமில் ஸ்கேன் செய்த போது பெண் குழந்தை என்பது தெரிந்தது. இதனால் 2 முறை கருக்கலைப்பு செய்தார். சில மாதங்களுக்கு முன்பு சுரேகா மீண்டும் கர்ப்பமானார். அங்குள்ள பவன் நர்சிங்ஹோமில் ஸ்கேன் செய்தபோது மீண்டும் பெண் குழந்தை வயற்றில் இருப்பது தெரியவந்தது.

இதையறிந்ததும் பிரகாஷ் கடும் ஆத்திரம் அடைந்தார். சுரேகாவை கருக்கலைப்பு செய்யும்படி மிரட்டினார். இதையடுத்து அங்குள்ள டாக்டரிடம் சென்றார். சுரேகா 6 மாத கர்ப்பிணி என்பதால், கருக்கலைப்பு செய்ய முடியாது என்று கூறிவிட்டார். இதனால் பிரகாசுக்கு மனைவி மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது. 3 தடவை கருத்தரித்தும் உன்னால் ஆண் குழந்தை பெற முடிய வில்லையே. நீ இனி உயிரோடு இருக்ககூடாது என்று கூறி சுரேகாவின் கழுத்தை நெரித்தார். இதில் அவர் இறந்து போனார்.

இதுபற்றி பழையாகர போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் ஸ்கேன் மூலம் பெண் குழந்தை கண்டு பிடித்து கூறியது பவன் நர்சிங்ஹோம் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆந்திர சுகாதாரத்துறை அதிகாரிகள் பவன் நர்சிங் ஹோமை சீல் வைத்தனர்.

No comments: