Thursday, May 12, 2011

ஜொள்ளு விட்ட கிரிக்கெட் வீரர்கள் - சியர் லீடர்.


தன்னிடமும், பிற சியர்லீடர் அழகிகளிடமும் ஜொள்ளு விட்டு, முத்தமிட, கட்டியணைக்க முயன்ற ஐபிஎல் வீரர்கள் குறித்து பெயர் குறிப்பிடாமல், பிளாக்கில் எழுதிய தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சியர்லீடர் அழகியை ஐபிஎல் நிர்வாகம் ஊருக்கு அனுப்பி வைத்து விட்டது.

ஐபிஎல் போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை விட ஒவ்வொரு அணியின் சியர்லீடர் அழகிகள் தான் அனைவரையும் கவருகிறார்கள். இப்படி சியர்லீடர்களாக செயல்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகுப் பெண்கள் ஐபிஎல் சியர்லீடர் குழுக்களில் இணைந்து செயல்படுகின்றனர்.

இவர்களிடம் வீரர்கள் ஜொள்ளு விட்டது குறித்து பிளாக்கில் எழுதப் போய் சிக்கலில் மாட்டி, வேலையை இழந்து நாடு திரும்பிள்ளார் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கேப்ரியலா பாஸ்குவாலோட்டோ.

இவர் ஆஸ்திரேலிய வீரர்களின் சேஷ்டைகள் குறித்து பிளாக்கில் பெயர் குறிப்பிடாமல் எழுதியிருந்தார். மேலும் தன்னிடமும், பிற அழகிகளிடமும் ஜொள்ளு விட்டவர்கள் குறித்தும் எழுதியிருந்தார். இதுகுறித்து ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் புகார் கூறவே, தற்போது கேப்ரியலா நீக்கப்பட்டு நாடு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து கேப்ரியலா தனது பிளாக்கில் கூறுகையில், ஒவ்வொரு போட்டி முடிந்ததும் இரவில் பார்ட்டி நடப்பதுண்டு. .அப்போது கிரிக்கெட் வீரரர்கள், எங்களிடம் வழிந்து வழிந்து பேசுவார்கள்.

தென் ஆப்பிரிக்க வீரர் கிரீம் ஸ்மித் தனது காதலி அருகில் இல்லாவிட்டால் மற்றவர்களிடம் வழிவார். ஆஸ்திரேலியர்கள்தான் மிகவும் சேஷ்டை பிடித்தவர்கள். குறிப்பாக ஐடன் பிளிஸ்ஸார்ட், டேன் கிறிஸ்டியன் ஆகியோரைச் சொல்லலாம்.

ஒரு முறை போட்டி முடிந்ததும் ஒரு வீரர் எங்களை அணுகி உங்களையெல்லாம் முத்தமிட விரும்புகிறேன். அவர்களில் குறிப்பாக 3 பேரிடம் மட்டும் அவர் அதிகமாகவே ஜொள்ளு விட்டார். இத்தனைக்கும் அந்த வீரருக்கு அவரது ஊரில் அழகான கேர்ள் பிரண்ட் இருக்கிறார். இருந்தாலும் எங்கள் அத்தனை பேர் மீதும் அவர் வெறியாக இருந்தார்.

என்னைப் பார்த்து என்னுடன் வா, பேசலாம் என்று கூட கேட்டார். நான் போகவில்லை.

இந்திய வீரர்கள் அப்படி இல்லை. சில வீரர்கள் மிக நன்றாகப் பழகுகிறார்கள். கேப்டன் டோணி, ஹோரித் சர்மா ஆகியோர் அமைதியானவர்கள். சச்சின் டெண்டுல்கர் இதுபோன்ற இடங்களுக்கு வருவதே இல்லை என்று கூறியுள்ளார் கேப்ரியலா.

கேப்ரியலாவின் இந்த பிளாக் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி விட்டது. ஆஸ்திரேலிய வீரர்கள் இதுகுறித்து அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து தற்போது கேப்ரியலாவை நீக்கி விட்டது ஐபிஎல் நிர்வாகம். மேலும் அவரை தென் ஆப்பிரிக்காவுக்கும் அனுப்பி வைத்து விட்டது.

இதை கண்டித்துள்ளார் கேப்ரியலா. நான் நடந்ததைத்தான் சொன்னேன். உண்மையைச் சொன்னதற்காக எனது வேலையைப் பறித்து விட்டது நியாயமல்ல என்று கூறியுள்ளார் கேப்ரியலா.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கான சியர்லீடர்கள் குழுவில் இடம் பெற்றிருந்தவர் கேப்ரியலா என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: