2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞர் டி.வி. பங்குதாரர் கனிமொழி எம்.பி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் மீதும் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் கடந்த 6-ந் தேதி இருவரும் ஆஜர் ஆனார்கள். நேற்று அமலாக்கப்பிரிவு முன்பு ஆஜரான போது சென்னையில் வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு முன்பு இன்று ஆஜராக வேண்டியது இருப்பதால் இன்னொரு நாளில் விசாரணைக்கு வருவதாக தெரிவித்தனர்.
இதற்கு அனுமதி வழங்கப்பட்டது, இதைத் தொடர்ந்து கனிமொழியும், சரத்குமாரும் இன்று காலை 11.45 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரிதுறை அலுவலகத்தில் வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு இணை இயக்குனர் வித்யா ராமச்சந்திரன் முன்பு ஆஜர் ஆனார்கள். 2007-ம் ஆண்டு டெல்லி மேல்சபை எம்.பி. பதவிக்கு போட்டியிட்ட போது கனிமொழி காண்பித்த சொத்துக்கணக்கில் கலைஞர் டி.வி. பங்கு குறித்து குறிப்பிட்டிருந்தாரா என்பது குறித்து விசாரிப்பதற்காக வருமான வரித்துறை புலனாய்வு பிரிவினர் சம்மனை அனுப்பி இருந்தனர்.
அதுபற்றி இன்று விசாரணை நடந்தது அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு கனிமொழி விளக்கம் அளித்தார். கனிமொழி வரும் தகவல் அறிந்ததும் ஏராளமான வெளி மாநில பத்திரிகையாளர்கள், டி.வி. நிறுவனத்தினர் குவிந்து இருந்தனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இதற்கு அனுமதி வழங்கப்பட்டது, இதைத் தொடர்ந்து கனிமொழியும், சரத்குமாரும் இன்று காலை 11.45 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரிதுறை அலுவலகத்தில் வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு இணை இயக்குனர் வித்யா ராமச்சந்திரன் முன்பு ஆஜர் ஆனார்கள். 2007-ம் ஆண்டு டெல்லி மேல்சபை எம்.பி. பதவிக்கு போட்டியிட்ட போது கனிமொழி காண்பித்த சொத்துக்கணக்கில் கலைஞர் டி.வி. பங்கு குறித்து குறிப்பிட்டிருந்தாரா என்பது குறித்து விசாரிப்பதற்காக வருமான வரித்துறை புலனாய்வு பிரிவினர் சம்மனை அனுப்பி இருந்தனர்.
அதுபற்றி இன்று விசாரணை நடந்தது அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு கனிமொழி விளக்கம் அளித்தார். கனிமொழி வரும் தகவல் அறிந்ததும் ஏராளமான வெளி மாநில பத்திரிகையாளர்கள், டி.வி. நிறுவனத்தினர் குவிந்து இருந்தனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
No comments:
Post a Comment