Thursday, May 12, 2011

ஆதிவாசிகள் நிலத்தை குத்தகைக்கு விட்டதால் தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. மீது சாணம் வீசிய பெண்கள் ; அலறியடித்து ஓட்டம்.

ஆதிவாசிகள் நிலத்தை குத்தகைக்கு விட்டதால் தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. மீது சாணம் வீசிய பெண்கள்; அலறியடித்து ஓட்டம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்குலோயா பகுதியில் ஜாடிகள் தயாரிக்க உதவும் களிமண் அதிக அளவில் உள்ளது. இப்பகுதியில் ஏராளமான ஆதிவாசிகள் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அரக்குலோயா தொகுதி தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. விவேரி சோமா அந்த நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டார். இதற்கு ஆதிவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் விவேரி சோமா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வந்தார். ஏற்கனவே அவர் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த பெண்கள் சாணத்தை எடுத்து சரமாரியாக வீசினார்கள்.

இதை சற்றும் எதிர்பாராத எம்.எல்.ஏ. தனது பாதுகாவலர்களுடன் ஓட்டம் பிடித்தார். ஆனாலும் பெண்கள் விடவில்லை. எம்.எல்.ஏ.வின் காரை அடித்து நொறுக்கினர்.

இதனால் அவர் உயிர் பிழைத்தால் போதும் என்று அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆதிவாசிகள் கூறும் போது, தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. விவேரிசோமா ஊழல் பேர் வழி. நாங்கள் வாழும் நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்க முயன்று வருகிறார். அவர் இனியும் இங்கு வந்தால் வெட்டிக் கொல்வோம் என்றனர்.

No comments: