Saturday, May 14, 2011

நான் எப்போதும் மன அமைதியாக உள்ளேன் : கனிமொழி.

நான் எப்போதும் மன அமைதியாக  உள்ளேன் : கனிமொழி

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்த துணைக் குற்றப்பத்திரிகையில் கனி மொழியை கூட்டு சதியாளர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த வாரம் 6-ந் தேதி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்தது. அதில் கனிமொழி ஜாமீன் மனு தீர்ப்பு 14-ந் தேதிக்கு தள்ளிவைத்தது .

இந்நிலையில் நேற்றிரவு அவர் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் கனிமொழியிடம் நிருபர்கள் தேர்தல் முடிவு குறித்து கருத்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த கனிமொழி, மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன் என்றார். இன்று காலை 10 மணிக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் கனிமொழி எம்.பி. ஆஜர் ஆனார். அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? என்ற பரபரப்பான எதிர் பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வரும் 20-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாக சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்தார். கலைஞர் டி.வி.நிர்வாக இயக்குனர் சரத்குமார் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதும் 20-ந் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி. பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் இருந்து வெளியில் வந்தார் அவருடன் அவரது கணவர் அரவிந்தன் மற்றும் தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு வந்திருந்தார்.

அப்பொழுது கனிமொழியிடம் நிருபர்கள் ஜாமீன் மனு மீது 20-ந் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இதுபற்றி உங்கள் கருத்து என்ன என கேட்டனர்

அதற்க்கு கனிமொழி -நான் எப்போதும் மன அமைதியாக( ரிலாக்சாக) உள்ளேன் , ஜாமீன் மனுமீதான தீர்ப்பு எவ்வாறு வரும்என்பதை மே 20ம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்

மேலும் கோர்ட் வளாகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவுடன் கனிமொழி சிறிது நேரம் பேசிவிட்டு சென்றார். அப்பொழுது ராசாவுடன் அவரது மனைவி மற்றும் மகள் உடன் இருந்தனர்.

1 comment:

மதுரை சரவணன் said...

ஜாமீன் கிடைத்தால் நல்ல மன அமைதி கிடைக்கும் ...