
மைலாப்பூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான எஸ்.வி.சேகர் வீட்டின் மீது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். சென்னை மந்தைவெளியில் வெள்ளிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்றது.
ஆட்டோ மற்றும் மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த சில மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டனர். இநத் சம்பவத்தில் எஸ்.வி.சேகர் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், அலமாறி கண்ணாடிகள் சேதமாகின. சத்தம் கேட்டு வெளியே வந்து பார்ப்பதற்குள், தாக்குதல் நடத்தியவர்கள் தப்பித்துவிட்டனர் என்றும், இந்த சம்பவம் இரவு 10.30 மணிக்கு நடந்தது என்றும் எஸ்.வி.சேகர் கூறினார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2006 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் எஸ்.வி.சேகர் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் மைலாப்பூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.வி.சேகர், அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியான அன்று எஸ்.வி.சேகர் வீடு தாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆட்டோ மற்றும் மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த சில மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டனர். இநத் சம்பவத்தில் எஸ்.வி.சேகர் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள், அலமாறி கண்ணாடிகள் சேதமாகின. சத்தம் கேட்டு வெளியே வந்து பார்ப்பதற்குள், தாக்குதல் நடத்தியவர்கள் தப்பித்துவிட்டனர் என்றும், இந்த சம்பவம் இரவு 10.30 மணிக்கு நடந்தது என்றும் எஸ்.வி.சேகர் கூறினார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2006 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் எஸ்.வி.சேகர் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் மைலாப்பூர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.வி.சேகர், அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியான அன்று எஸ்.வி.சேகர் வீடு தாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment