Saturday, May 14, 2011

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு - ஜெயலலிதா என்ன செய்யப் போகிறார்?


பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் இன்று இரவு முதல் உயருகிறது. நாடு முழுவதும் நள்ளிரவு 12 மணி முதல் புதிய விலை அமலுக்கு வருகிறது.

கடந்த 8 மாதங்களில் 9வது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் தற்போது பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தற்போது பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.61.48க்கு விற்பனை செய்யப்படுகிறது. புதிய விலை பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.67.48 என அறியப்படுகிறது.

சில நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு இப்போதைக்கு இருக்காது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன

ஜெயலலிதா என்ன செய்யப் போகிறார்?

மாநில அரசின் வரியைக் குறைத்து, பெட்ரோல், டீசல், விலையேற்றத்தை தடுத்து அதன் மூலம் விலைவாசியை கட்டுக்கு கொண்டுவருவாரா? இல்லை ஆட்சிக்கு வந்த வேலையைப் பார்ப்பாரா?

No comments: