Saturday, May 14, 2011

ஜெயலலிதாவுக்கு - மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் வாழ்த்து.


தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தனர்.

அதே போல மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும், ஜெயலலிதா, தனது இதயம் நிறைந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார் என்று கூறப்பட்டுள்ளது.

No comments: