Saturday, May 14, 2011

மக்களுக்குத்தான் தோல்வி : நடிகை குஷ்பு.


தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு தோல்வி அல்ல, மக்களுக்கு தான் என்று நடிகை குஷ்பு கூறினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு 13.05.2011 காலை வெளியானது. வாக்கு எண்ணிக்கையையொட்டி தி.மு.க., அ.தி.மு.க. தேர்தல் அலுவலங்களில் தொண்டர்கள் காலை முதலே குவிய தொடங்கினர்.

திமுக தலைவர் கலைஞர் இல்லமான கோபாலபுரத்தில் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் குவிந்து இருந்தனர்.

காலை 10.30 மணியளவில் கலைஞரை பார்க்க மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, நெப்போலியன், நடிகை குஷ்பூ ஆகியோர் வந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு,

இது தி.மு.க.விற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி. அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. தி.மு.க. கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பான திட்டங்களை வழங்கி மக்களை காப்பாற்றியிருக்கிறது. இதை அவர்கள் உணரவில்லை.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் மீடியாக்கள் அதிகமாக விளையாடி விட்டன. இந்த வழக்கில் இருந்து தி.மு.க. மீண்டு வரும், மீண்டும் வரும் என்றார்.

2 comments:

ramalingam said...

இன்னும் அடங்க மாட்டீங்க.

Yoga.s.FR said...

தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு தோல்வி அல்ல, மக்களுக்கு தான் என்று நடிகை குஷ்பு கூறினார்.உண்மையைத் தான் சொல்லுறீங்க!பேரப் புள்ளங்க,பூட்டப் புள்ளங்கள வுட்டுட்டீங்களே?ஓஓஓஓஓஓஅதெல்லாம் "மக்களு"க்குள்ள அடங்கிடுவாங்க,இல்ல??