Wednesday, May 11, 2011

ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவுகள் : தமிழக மாணவி முதலிடம்.



ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது .

இதில் முதல் 10 இடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தியக் குடிமைப் பணிகளுக்கான (சிவில் சர்வீசஸ்) 2010 தேர்வில் தமிழக மாணவி முதல் ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் 3-வது, 4-வது மற்றும் 8-வது ரேங்குகளையும் தமிழகம் பெற்றுள்ளது. சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் 10 ரேங்க்குகளில் 4 இடங்களை தமிழகம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

முதல் இடத்தில் திவ்ய தர்ஷினி,

3ம் இடத்தில் வருண்குமார்,

4ம் இடத்தில் அபிராம் சங்கரன்,

8ம் இடத்தில் அரவிந்த்

ஆகியோர் இடம் பிடித்தனர். நேர்முகத் தேர்வுக்கு 2400 பேர் கலந்து கொண்டனர் அதில் 920 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வெளியுறவுப் பணி உள்ளிட்ட பல்வேறு இந்தியக் குடிமைப் பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தத் தேர்வு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்ற மூன்று நிலைகளில் நடத்தப்படும்.

2010-ம் ஆண்டுக்கான இந்தியக் குடிமைப் பணி தேர்வில், முதல்நிலைத் தேர்வு 2010 மே மாதம் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை இந்தியா முழுவதிலிமிருந்து 3.48 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்திலிருந்து 22 ஆயிரம் பேர் எழுதினர். இவர்களில் 12 ஆயிரத்து 491 பேர் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 847 பேர். 2010 அக்டோபர் மாதம் நடைபெற்ற முதன்மைத் தேர்வில் 2,400 பேர் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 240 பேர்.

கடந்த ஏப்ரல் மாதம் இறுதிக் கட்டமான நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதில் காலிப் பணியிடங்கள் உள்ள அளவிற்கேற்ப 920 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் திவ்யதர்ஷிணி என்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண் முதல் ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.



இதுபோல் 3-வது ரேங்க்கை தமிழகத்தைச் சேர்ந்த வருண்குமார் என்ற மாணவர் பெற்றுள்ளார். இவர் ஒரு பல் மருத்துவர் ஆவார். சென்னை உத்தண்டியில் உள்ள ராகாஸ் பல் மருத்துவ கல்லூரியில் பயின்றவர்

அபிராமசங்கர் என்ற மாணவர் 4-வது ரேங்க் பெற்றுள்ளார். இவர் முதல் முயற்சி யிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்திருப்பதோடு, மிகக் குறைந்த 22 வயதில் தேர்ச்சி பெற்றவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். திருநெல்வேலி யைச் சேர்ந்த இவர், இப்போது குடும்பத்துடன் கேரளத்தில் வசித்து வருகிறார்.

இதுபோல் 8-வது ரேங்க்கை அரவிந்த் என்ற தமிழக மாணவர் பெற்றுள்ளார். முதல் 10 ரேங்க்குகளில் 4 இடங்களை தமிழகம் பெறுவது இதுவே முதல் முறை.

கடந்த 2005-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த நாகராஜ் என்ற மாணவர் முதல் ரேங்க் பெற்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஊழலுக்கு எதிராக போராடுவேன் ; ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்த திவ்யதர்ஷினி.

ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று மாலை வெளியியாகியது. அதில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டைச்சேர்ந்த திவ்யதர்ஷினி முதலிடத்தை பிடித்தார்.

இதுவரை தமிழகத்தைச்சேர்ந்த எவரும் முதலிடத்தை பிடிக்கவில்லை. முதல் நபர் என்ற பெருமைக்குரியவர் ஆகிறார் திவ்யதர்ஷினி.

திவ்யதர்ஷினி, டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாரானவர்.

அவரை தொடர்புகொண்டபோது, ‘’எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றியை எனது பெற்றோர்களுக்கும், பயிற்சி அளித்த பிரபாகரன் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் திரு. பிரபாகரன் அவர்களுக்கும் காணிக்கை ஆக்குகிறேன்.

என் பெற்றோர்கள் எனக்கு அதிக சுதந்திரமும் கொடுத்து, என் வெற்றிக்கு பெரிதும் ஆதரவாக இருந்தனர்.

நான் நிச்சயமாக ஐஏஎஸ் பணியின் மூலம் இந்த சமுதயாத்திற்கு சிறந்த சேவை ஆற்றுவேன். மேலும் ஊழலுக்கு எதிராக போராடுவேன்’’ என்று தெரிவித்தார்.

2 comments:

தருமி said...

congrats to all the four.
it sounds so great ...

பழமைபேசி said...

வாழ்த்துகள்