Wednesday, May 11, 2011

முல்லா ஓமரைத் தேடி அமெரிக்காவின் அடுத்தகட்ட வேட்டை தொடங்கியது.


பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் அல் காய்தா தலைவர் பின்லேடனை வீழ்த்திய அமெரிக்க படைகள் தற்போது ஆப்கன் தலிபான் தலைவர் முல்லா ஓமரைத் தேடி வேட்டையைத் தொடங்கியுள்ளன.

ஓமரின் மறைவிடம் என சந்தேகிக்கப்படும் இடங்களில் அமெரிக்க மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் கூட்டுப் படைகள் சோதனைகளை நடத்தி வருகின்றன.

சமீபத்திய நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்ததால் அடுத்தகட்ட வேட்டையை அமெரிக்கப் படைகள் தொடங்கியுள்ளன.

ஆப்கன் எல்லை அருகே பாகிஸ்தானின் மேற்கு பாகிஸ்தானின் குவெட்டா நகரில் ஓமர் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பின்லேடன் கொல்லப்பட காரணமான அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கையால் அவமானம் அடைந்துள்ள பாகிஸ்தான் உளவுத்துறை, ஓமரை முதலில் கண்டுபிடிக்க ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

அபோட்டாபாதில் பின்லேடனின் மறைவிடத்தில் இருந்து தகவல்களை சேகரித்தபின்னர் ஓமரின் மறைவிடத்தில் தாக்குதல் நடத்த அமெரிக்கப் படைகள் திட்டம் தீட்டி வருகின்றன.

எனினும் அமெரிக்கப் படைகள் தன்னைக் கொன்றுவிடும் என்ற அச்சத்தில் கனரக ஆயுதங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ஓமருக்கு பாதுகாப்பு அளித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: