Wednesday, May 11, 2011

கடலில் உடலை வீசியுள்ளனர் : அமெரிக்காவிற்கு பின்லேடன் மகன் கண்டனம்.


கடலில் உடல் அடக்கம்: பின்லேடன் மகன் கண்டனம்;    எங்கள் குடும்பத்தை அவமானப்படுத்தி விட்டனர்

சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடன் கடந்த 2-ந் தேதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டார். பின்னர் அவரது உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதற்கு பின்லேடனின் 4-வது மகன் ஒமர் பின்லேடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக வளைகுடா நாட்டில் தங்கியுள்ள அவர் ஒரு இணையதளத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

பின்லேடன் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எங்களுக்கு உண்டு. மேலும் அவர் கொல்லப்பட்டதற்கான காரணத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா தெளிவுபடுத்த வேண்டும். பின்லேடன் கொல்லப் பட்டதற்கு அமெரிக்கா மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எங்களுக்கு உண்டு.

அவரது உடலை கடலில் வீசியுள்ளனர். மனிதாபிமான ரீதியாகவும், மதரீதியாகவும் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் மூலம் எங்கள் குடும்பத்தையும், அவரது ஆதரவாளர்களையும் அமெரிக்கா அவமதித்து விட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: