Wednesday, May 11, 2011

நீதிபதிகள் மீது ஊழல் புகார்: சுப்ரீம் கோர்ட் ஆவேசம்.


டெல்லி கூடுதல் மாவட்ட பெண் நீதிபதி அர்ச்சனா சின்கா, சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறியது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜபு, கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

நீதிபதி அர்ச்சனா, சூப்பர் சுப்ரீம் கோர்ட்டாக செயல்படுவதாக கூறிய நீதிபதிகள், அவரை ஜெயிலுக்கு அனுப்பி விடுவோம், சஸ்பெண்டு செய்து விடுவோம்' என்று எச்சரித்தனர். நீதிபதி அர்ச்சனா மன்னிப்பு கேட்டதால், அந்நடவடிக்கையை கைவிட்டனர்.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது: கீழ்கோர்ட் நீதிபதிகள் மீது ஏராளமான ஊழல் புகார்கள் வருகின்றன. அவர்களால் ஒட்டுமொத்த நீதித்துறைக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது. நீதிபதிகளை மக்கள் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். 80 சதவீத நீதிபதிகள், ஊழல்வாதிகள் என்று பேசப்படுகிறது. இது வெட்கக்கேடானது. இத்தகைய ஊழல் நீதிபதிகளை நீதித்துறையில் இருந்து தூக்கி எறிய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments: