Wednesday, May 11, 2011

அடுத்த வாரம் சமையல் “கியாஸ்” விலை ரூ.20 உயரும்.

அடுத்த வாரம் சமையல் “கியாஸ்” விலை ரூ.20 உயரும்

சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை உயர்ந்த போதிலும், பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

தமிழ்நாடு, புதுவை, கேரளா உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்ததால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதனால் எண்ணை நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கூட்டம் தள்ளிவைப்பு நேற்று பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்துவது தொடர்பான மத்திய மந்திரி குழு கூட்டம் நடப்பதாக இருந்தது.

ஆனால் சில மத்திய மந்திரிகள் கலந்து கொள்ள முடியாததால் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இன்று மத்திய மந்திரிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நாளை நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3 வரை உயர்த்த முடிவு செய்யப்படும் என்று பெட்ரோலியத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேபோல் டீசல், கியாஸ் விலை அடுத்த வாரம் முதல் உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது. டீசல் லிட்டருக்கு ரூ. 3 முதல் ரூ. 4 வரையும், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ. 20 முதல் ரூ. 25 வரையும் உயர்த்தப்படுகிறது. இதுபற்றி மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்.

No comments: