Wednesday, May 11, 2011

தேர்தலுக்குப் பின்னர் நடத்தப்பட்ட வாக்குக் கணிப்பு .


தமிழகத்தில் அதிமுக முன்னிலை:

சிவிஜி நியூஸ்- சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், தமிழகத்தில் 234 பேரவைத் தொகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு 168 முதல் 176 இடங்களும், திமுக கூட்டணிக்கு 54 முதல் 62 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஊழல் விவகாரங்களால் திமுக கூட்டணிக்கு 6 சதவீத வாக்கு வங்கி குறைந்திருப் பதாகவும், அதிமுக கூட்டணிக்கு 4 சதவீத வாக்கு வங்கி அதிகரித்திருப்பதாகவும் கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சின்.என்.என்.-ஐ.பி.என். கருத்துக் கணிப்பின்படி அதிமுக கூட்டணிக்கு 120- 130 இடங்களும், திமுக கூட்டணிக்கு 102- 114 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெட்லைன்ஸ் டுடே- ஓ.ஆர்.ஜி. நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில், திமுக கூட்டணி 115- 130 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 105- 120 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டார் நியூஸ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில், தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 124 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 110 இடங்களும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் ஆட்சி மாற்றம்:

கேரளத்தில் ஆட்சி மாற்றம்: 140 உறுப்பினர்கள் கொண்ட கேரள சட்டப் பேரவையில் காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயக முன்னணி 83 முதல் 91 இடங்களையும், ஆளும் இடதுசாரி கூட்டணி 49 முதல் 57 இடங்களையும் கைப்பற்றக்கூடும் சிவிஜி நியூஸ்- சி வோட்டர் கருத்துக் கணிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.

கேரளத்தில் ஆளும் இடதுசாரி முன்னணிக்கு 69- 77, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கு 63- 71 இடங்களும் கிடைக்கும் என்று சின்.என்.என்.-ஐ.பி.என். கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஹெட்லைன்ஸ் டுடே- ஓ.ஆர்.ஜி கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி 85-92 இடங்களிலும், ஆளும் இடதுசாரி கூட்டணி 49- 57 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் மம்தா:

மேற்கு வங்கத்திலும் ஆட்சி மாற்றம்: மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி 184 முதல் 192 இடங்களையும், ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு 48 முதல் 56 இடங்கள் மட்டுமே கிடைக்கக்கூடும் என்று சிவிஜி நியூஸ்- சி வோட்டர் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கூட்டணி 222-234 தொகுதிகளைக் கைப்பற்றி பெற்று அமோக வெற்றி பெறும் என்றும், இடதுசாரி முன்னணிக்கு 60- 72 இடங்கள் கிடைக்கும் என்று சி.என்.என்.-ஐ.பி.என். கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஹெட்லைன்ஸ் டுடே, ஓ.ஆர்.ஜி. கருத்துக் கணிப்பின்படி, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கூட்டணிக்கு 210-220 இடங்களும், இடதுசாரி கூட்டணிக்கு 65- 70 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அசாமில் இழுபறி:

அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ் 64- 72 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று சின்.என்.என்.-ஐ.பி.என். கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அசாம் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று சிவிஜி நியூஸ்- சி வோட்டர் தெரிவித்துள்ளது. ஆளும் காங்கிரஸýக்கு 41 முதல் 45 இடங்களும், பாஜகவுக்கு 14 முதல் 18 இடங்களும், அசாம் கண பரிஷத் கட்சிக்கு 31 முதல் 35 இடங்களும் கிடைக்கக்கூடும். இதனால், ஆட்சியை தக்க வைப்பதில் காங்கிரஸýக்கு பின்னடைவு ஏற்படும் என்றும், மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமையக்கூடும் என்று சிவிஜி நியூஸ்- சி வோட்டர் கருத்துக் கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹெட்லைன்ஸ் டுடே, ஓ.ஆர்.ஜி. கருத்துக் கணிப்பின்படி, காங்கிரஸ் 41- 47 இடங்களிலும், பாஜக 16- 18 இடங்களிலும், அசாம் கணபரிஷத் 13- 15 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments: