
தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்தக் கூட்டணி பெருவாரியான இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று உறுதியாக கணித்துக் கூற பிரபல செய்தி சேனல் நிறுவனங்களிடையே பெரும் குழப்பமே ஏற்பட்டுள்ளது.
நேற்று வெளியான நான்கு தொலைக்காட்சிகளின் எக்ஸிட் போல் முடிவுகளில் இரண்டு திமுகவுக்கு சாதகமாகவும், இரண்டு அதிமுகவுக்கு சாதகமாகவும் உள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் நக்கீரன் சர்வே தவிர, பிற கருத்துக் கணிப்புகளில் அதிமுக அதிக இடங்களைப் பெறும் என்று கூறப்பட்டது. ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய ஹெட்லைன்ஸ் டுடே கணிப்பில் திமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டது.
இதற்கிடையே பல்வேறு செய்திச் சேனல்களும் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை எடுத்து வந்தன. நேற்று மாலை வரை தேர்தல் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்ததால், மாலை 5 மணிக்குப் பிறகு கணிப்புகளை வெளியிட ஆரம்பித்து உள்ளன.
கருணாநிதிக்கு ஆதரவு:
யார் முதல்வராக வரவேண்டும் என்ற கேள்விக்கு கருணாநிதிக்கு சாதகமாக 48 சதவீதத்தினரும், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக 38 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
யார் மோசமான முதல்வர் என்ற கேள்விக்கு ஜெயலலிதா என 34 சதவீதம் பேர் தெரிவித்திருந்தனர். கருணாநிதி என 33 சதவீதத்தினர் கூறியிருந்தனர்.
தமிழகத்தில் 70 தொகுதிகளில் 4167 வாக்காளர்களைச் சந்தித்து இந்த எக்ஸிட் போலை நடத்தியுள்ளது சிஎன்என் ஐபிஎன் - திவீக் குழு.
இவர்களில் 68 சதவீதம் வாக்காளர்கள் திமுக ஆட்சி திருப்தியாக இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர். 26 சதவீதம் பேர் அதிருப்தி என கூறியுள்ளனர்.
திமுக ஆட்சியில் சாலை வசதி மேம்பட்டிருந்ததாக 82 சதவீதத்தினரும், குடிநீர் வசதி சிறப்பாக செய்யப்பட்டதாக 76 சதவீதத்தினரும், கல்வி விஷயத்தில் அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக 77 சதவீதத்தினரும், அரசு மருத்துவமனை செயல்பாடு திருப்தியாக இருந்ததாக 70 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்து இருந்தனர்.
மின்சார வசதி நன்றாக உள்ளது என 52 சதவீதத்தினர் கருத்து கூறியிருந்தனர். 48 சதவீதத்தினர் மோசம் என்று கூறியிருந்தனர்.
அதேபோல சட்டம் ஒழுங்கு குறித்தும் 60 சதவீதத்திற்கு உட்பட்டவர்கள்தான் திருப்தி தெரிவித்திருந்தனர்
ஹெட்லைன்ஸ் டுடே:
திமுக 130 இடங்கள் வரை பெறும் என்கிறது ஹெட்லைன்ஸ் டுடே - ஓஆர்ஜி கணிப்பு. இதுவரை இவர்கள் மூன்று கருத்துக் கணிப்புகளை நடத்திவிட்டனர். அவற்றில் இரண்டில் திமுகவுக்கு சாதகமான முடிவுகள் வந்துள்ளன.
இவர்கள் கணிப்புப் படி, திமுக கூட்டணி - 115 முதல் 130 வரை இடங்களைப் பெற்று ஆட்சியமைக்கும். அதிமுக கூட்டணிக்கு 105 முதல் 120 வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆட்சியைப் பிடிப்பதில் திமுக - அதிமுக கூட்டணிகள் இடையே கடும்போட்டி நிலவும் என்றும் ஆனால், திமுகவுக்கு வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஸ்டார் நியூஸ் - நீல்சன் கணிப்பு:
ஸ்டார் நியூஸ் மற்றும் நீல்சன் மேற்கொண்ட கணிப்பின்படி திமுக கூட்டணி 124 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அதிமுக கூட்டணி 110 தொகுதிகளில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. எப்படியும் மீண்டும் திமுக ஆட்சியே தமிழகத்தில் அமையும் என்கிறது ஸ்டார் நியூஸ் கணிப்பு.
நேற்று வெளியான நான்கு தொலைக்காட்சிகளின் எக்ஸிட் போல் முடிவுகளில் இரண்டு திமுகவுக்கு சாதகமாகவும், இரண்டு அதிமுகவுக்கு சாதகமாகவும் உள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் நக்கீரன் சர்வே தவிர, பிற கருத்துக் கணிப்புகளில் அதிமுக அதிக இடங்களைப் பெறும் என்று கூறப்பட்டது. ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய ஹெட்லைன்ஸ் டுடே கணிப்பில் திமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டது.
இதற்கிடையே பல்வேறு செய்திச் சேனல்களும் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை எடுத்து வந்தன. நேற்று மாலை வரை தேர்தல் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்ததால், மாலை 5 மணிக்குப் பிறகு கணிப்புகளை வெளியிட ஆரம்பித்து உள்ளன.
கருணாநிதிக்கு ஆதரவு:
யார் முதல்வராக வரவேண்டும் என்ற கேள்விக்கு கருணாநிதிக்கு சாதகமாக 48 சதவீதத்தினரும், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக 38 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
யார் மோசமான முதல்வர் என்ற கேள்விக்கு ஜெயலலிதா என 34 சதவீதம் பேர் தெரிவித்திருந்தனர். கருணாநிதி என 33 சதவீதத்தினர் கூறியிருந்தனர்.
தமிழகத்தில் 70 தொகுதிகளில் 4167 வாக்காளர்களைச் சந்தித்து இந்த எக்ஸிட் போலை நடத்தியுள்ளது சிஎன்என் ஐபிஎன் - திவீக் குழு.
இவர்களில் 68 சதவீதம் வாக்காளர்கள் திமுக ஆட்சி திருப்தியாக இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளனர். 26 சதவீதம் பேர் அதிருப்தி என கூறியுள்ளனர்.
திமுக ஆட்சியில் சாலை வசதி மேம்பட்டிருந்ததாக 82 சதவீதத்தினரும், குடிநீர் வசதி சிறப்பாக செய்யப்பட்டதாக 76 சதவீதத்தினரும், கல்வி விஷயத்தில் அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக 77 சதவீதத்தினரும், அரசு மருத்துவமனை செயல்பாடு திருப்தியாக இருந்ததாக 70 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்து இருந்தனர்.
மின்சார வசதி நன்றாக உள்ளது என 52 சதவீதத்தினர் கருத்து கூறியிருந்தனர். 48 சதவீதத்தினர் மோசம் என்று கூறியிருந்தனர்.
அதேபோல சட்டம் ஒழுங்கு குறித்தும் 60 சதவீதத்திற்கு உட்பட்டவர்கள்தான் திருப்தி தெரிவித்திருந்தனர்
ஹெட்லைன்ஸ் டுடே:
திமுக 130 இடங்கள் வரை பெறும் என்கிறது ஹெட்லைன்ஸ் டுடே - ஓஆர்ஜி கணிப்பு. இதுவரை இவர்கள் மூன்று கருத்துக் கணிப்புகளை நடத்திவிட்டனர். அவற்றில் இரண்டில் திமுகவுக்கு சாதகமான முடிவுகள் வந்துள்ளன.
இவர்கள் கணிப்புப் படி, திமுக கூட்டணி - 115 முதல் 130 வரை இடங்களைப் பெற்று ஆட்சியமைக்கும். அதிமுக கூட்டணிக்கு 105 முதல் 120 வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆட்சியைப் பிடிப்பதில் திமுக - அதிமுக கூட்டணிகள் இடையே கடும்போட்டி நிலவும் என்றும் ஆனால், திமுகவுக்கு வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஸ்டார் நியூஸ் - நீல்சன் கணிப்பு:
ஸ்டார் நியூஸ் மற்றும் நீல்சன் மேற்கொண்ட கணிப்பின்படி திமுக கூட்டணி 124 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அதிமுக கூட்டணி 110 தொகுதிகளில் வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. எப்படியும் மீண்டும் திமுக ஆட்சியே தமிழகத்தில் அமையும் என்கிறது ஸ்டார் நியூஸ் கணிப்பு.
1 comment:
மறுபடியும் மொதல்ல இருந்தா ....!
Post a Comment