Wednesday, May 11, 2011

போபால் விஷவாயு வழக்கை மீண்டும் விசாரிக்க மறுப்பு : சிபிஐ மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்.


15 ஆண்டுகளுக்கு முன், போபாலில் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் விஷவாயு அதிக அளவில் கசிந்தது. இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். ஆயிரக்கணக்கானவர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது.

இது தொடர்பான வழக்கில் தொழிற்சாலையின் தலைவர் கேசுப் மகிந்திரா உள்பட 7 பேருக்கு ஏற்கனவே 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை போதாது. குற்றவாளிகளுக்கு கொலை குற்றத்துக்கான தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்து இருந்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், போபால் விஷவாயு வழக்கை மீண்டும் விசாரிக்க மறுப்பு தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

No comments: