Wednesday, May 11, 2011

பாட்டியாலா கோர்ட்டில் ராசா - கனிமொழி சந்திப்பு?


ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதான முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கடந்த 83 நாளாக திகார் சிறையில் இருந்து வருகிறார்.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்ததால் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக வந்திருந்த கனிமொழியை சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.

நீதிமன்றத்தில் ராசா அமைதியாகவே காணப்பட்டார். அவர் மாலை 4.30 மணி வரை நீதிமன்றத்தில் இருந்தார். பின்னர் அவரை சிறைச்சாலைக்கு அழைத்து வந்தனர்.

கடந்த ஆண்டுகளில் பிறந்தநாளை பிரமாண்டமாகக் கொண்டிய ராசாவுக்கு இந்த பிறந்தநாளை சிறையிலும், நீதிமன்றத்திலும் கழிக்க வேண்டியதாயிற்று.

ஆ.ராசா 48-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். ஆனால் அவர் சிறையில் பிறந்தநாளை கொண்டாடவில்லை.


No comments: