Wednesday, May 11, 2011

' அதிமுக ஆட்சி ' - சிஎன்என் - ஐபிஎன் கணிப்பு.


தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்தக் கூட்டணி பெருவாரியான இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று உறுதியாக கணித்துக் கூற பிரபல செய்தி சேனல் நிறுவனங்களிடையே பெரும் குழப்பமே ஏற்பட்டுள்ளது.

நேற்று வெளியான நான்கு தொலைக்காட்சிகளின் எக்ஸிட் போல் முடிவுகளில் இரண்டு திமுகவுக்கு சாதகமாகவும், இரண்டு அதிமுகவுக்கு சாதகமாகவும் உள்ளது. தேர்தல் கணிப்புகளை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்ததால், மாலை 5 மணிக்குப் பிறகு கணிப்புகளை வெளியிட ஆரம்பித்து உள்ளன.

2 ஜி விவகாரம்...


2 ஜி முறைகேட்டை இந்த தேர்தலை பாதிக்கும் விஷயமாக 6 சதவீதத்தினர்தான் எடுத்துக் கொண்டதாக இந்த கணிப்புகளில் தெரிய வந்துள்ளது. 2ஜி காரணமாக தனது வாக்கை அதிமுக அணிக்கு போட்டதாக 7 சதவீதம் பேர் தெரிவித்திருந்தனர்.

இந்த ஊழலுக்கு யார் முக்கிய காரணம் என்ற கேள்விக்கு 53 சதவீதத்தினர் ஏ ராஜா என்றும், 48 சதவீதத்தினர் கனிமொழி என்றும் கூறியிருந்தனர். 34 சதவீதத்தினர் கருணாநிதியையும் 32 சதவீதத்தினர் தயாளு அம்மாளையும் காரணமாக சுட்டிக் காட்டியுள்ளனர்.

சிஎன்என் - ஐபிஎன்:

முதல் கட்டமாக சிஎன்என் -ஐபிஎன் - தி வீக் தனது எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிட ஆரம்பித்துள்ளது. இரவு 9.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு 132 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், திமுக கூட்டணிக்கு 114 இடங்கள் வரை கிடைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

நியூஸ் எக்ஸ்:

நியூஸ் எக்ஸ் சேனல் முடிவுகளில் அதிமுக கூட்டணிக்கு 176 இடங்கள் வரை கிடைக்கும் என்றும், திமுக கூட்டணிக்கு 64 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு இந்த கணிப்பு முடிவு வெளியிடுவதை நிறுத்திக் கொண்ட இந்த சேனல். 2 ஜிதான் திமுகவுக்கு பெரும் வீழ்ச்சி என்று கூறியது.

No comments: