Tuesday, May 10, 2011

அமெரிக்க தாக்குதலுக்கு முன்பே பின்லேடன் இறந்து விட்டார் ; ஈரான் புதிய தகவல்.

அமெரிக்க தாக்குதலுக்கு முன்பே பின்லேடன் இறந்து விட்டார்;    ஈரான் புதிய தகவல்

உலகையே அச்சுறுத்திய அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் அபோதாபாத் நகரில் கடந்த 2-ந்தேதி அமெரிக்க ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு அவரது உடலை கடலில் அடக்கம் செய்ததாக அமெரிக்கா அறிவித்தது. இதை ஈரான் அரசு மறுத்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் உளவுத் துறை மந்திரி ஹைதர் மோஸ்லேகி ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

அல்கொய்தா இயக்க தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொல்லவில்லை. உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பே இறந்து விட்டார். அதற்கான நம்பகத்தகுந்த மிக சரியான தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. உண்மையிலேயே அவரை அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுத்துறை கைது செய்திருந்தாலோ அல்லது கொன்று இருந்தாலோ அவரது உடலை ஏன் காட்ட வில்லை.

உடலை கடலில் ஏன் வீச வேண்டும். எனவே இந்த செய்தி அப்பட்டமான பொய்யாகும். அமெரிக்காவில் நிலவும் உள்நாட்டு பிரச்சினையை திசை திருப்ப குறிப்பாக அங்கு நிலவும் பொருளாதார மந்த நிலை குறித்து மக்கள் எண்ணத்தை மாற்ற வெள்ளை மாளிகை அதிகாரிகள் பின்லேடன் கொல்லப்பட்டதாக பொய் செய்தியை பரப்பியுள்ளனர்.

இவ்வாறு மந்திரி ஹைதர் மோஸ்லேகி தெரிவித்துள்ளார்.

No comments: