Tuesday, May 10, 2011

மும்பை தாக்குதல் : அமெரிக்கா குற்றப்பத்திரிகை தாக்கல்.

மும்பை தாக்குதல் :அமெரிக்கா குற்றப்பத்திரிகை தாக்கல்

பல பயங்கரவாதிகள் மீதான வழக்கு விசாரணை சிகாகோ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அமெரிக்கா இன்று 2 வது குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்துள்ளது.

இதில் கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ., உதவியது தெரியவந்துள்ளது .அதில் மும்பை தாக்குதலில் ஈடுப்பட்டதாக டேவிட் ஹெட்லி உள்ளிட்ட 5 பேர் மீது அமெரிக்கா குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும் அந்த ஆதாரங்கள் அடங்கிய முழு விபரங்களையும் அமெரிக்கா இந்தியாவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிகின்றது .

தற்போது மும்பை தாக்குதலில் ஈடுப்பட்டதாக கூறப்படும் 5 பேரின் புகைப்படத்துடன் முழு விபரத்தவும் இந்தியா வெளியிட்டுள்ளது அதில் மாஜித் இக்பால் ,ஷாஹித் மஜீத் ,அபு கஹபா,லஷ்கர் மற்றும் ஐ.எஸ்.ஐ., அதிகாரி மேஜர் இக்பால் ஆகிய 4 பயங்கரவாதிகள் பெயரும், ஒரு ஐ.எஸ்.ஐ., அதிகாரியின் பெயரையும் வெளியிட்டுள்ளது .மேலும் அமெரிக்க குற்றப்பத்திரிகையிலும் இவை அனைத்தும் இடம்பெற்றுள்ளது.

No comments: