Tuesday, May 10, 2011

புவி வெப்பமடைதல் காரணமாக மன்னார் வளைகுடாவில் 2 தீவுகள் கடலில் மூழ்கியது.

புவி வெப்பமடைதல் காரணமாக மன்னார் வளைகுடாவில் 2 தீவுகள் கடலில் மூழ்கியது

மன்னார் வளைகுடா பகுதியில் 21 தீவுகள் அமைந்துள்ளது. அதில் மிக சிறிய தீவின் பரப்பளவு 0.6 ஏக்கர் ஆகும். மிகப்பெரிய தீவின் பரப்பளவு 321.2 ஏக்கர். இந்த தீவுகளின் இருப்பிடத்தை வைத்து தூத்துக்குடி, வேம்பார், கீழக்கரை, மண்டபம் என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் மண்டபம் பிரிவில் பூமரிச்சான் தீவும், தூத்துக்குடி பிரிவில் விலங்கு சல்லி தீவும் இடம் பெற்று இருந்தன. இந்த 2 தீவுகளும் கடலில் மூழ்கியுள்ளன.

புவி வெப்பமடைதலால் கடல் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இந்த 2 தீவுகளும் கடலில் மூழ்கி விட்டன என மன்னார் வளைகுடா கடல்சார் தேசிய பூங்கா வார்டன் சுந்தரகுமார் கூறினார்.

பவள பாறைகள் தீவுகளுக்கு தடுப்பு அமைப்பாக செயல்பட்டு வந்தது. சட்ட விரோதமாக பவளப்பாறைகளை வெட்டியதால்தான் தீவுகள் மூழ்கி விட்டன என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் மேம்பாட்டு திட்ட பிரதிநிதி தீபக் சாமுவேல் கூறினார்.

கடந்த நூற்றாண்டில் பருவ மாற்றத்தினால் கடல் நீர்மட்டம் சராசரியாக ஆண்டுக்கு 1.8 மி.மீ. உயர்ந்துள்ளது. இது எதிர்காலத்தில் பெரும்பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஆனால் இப்போதுள்ள நிலையில் தீவுகள் மூழ்கியது பருவ மாற்றம் காரணமாக இருக்க முடியாது என்று பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கான உலக அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்த்தி ஸ்ரீதர் கூறி உள்ளார்.

No comments: