Tuesday, May 10, 2011

2ஜி விசாரணையை ஜூலை 31-க்குள் முடிக்க சிபிஐ திட்டம்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணையை ஜூலை மாதம் 31-ம் தேதிக்குள் முடிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது.
இத்தகவலை சிபிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.இந்த வழக்கில், மேலும் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே, தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளில் முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ. ராசா, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார், கனிமொழி உள்ளிட்டோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது சிபிஐ அமைப்பில் அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பல்வேறு நீதிமன்றங்களில் சுமார் 10 ஆயிரம் வழக்குகள் தேங்கியுள்ளன.

இதனிடையே, நாட்டிலேயே மிகப் பெரிய ஊழலான 2ஜி வழக்கின் விசாரணையை ஜூலை 31-ம் தேதிக்குள் முடிக்க சிபிஐ திட்டமிட்டுள்ளது.

No comments: