Tuesday, May 10, 2011

பாகிஸ்தானில் உள்ள சிஐஏ அதிகாரியை திரும்பப் பெற முடியாது: அமெரிக்கா.


பாகிஸ்தானில் உள்ள அமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரியை திருப்பி அழைத்துக் கொள்ள முடியாது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இஸ்லாமாபாத்தில் இருந்து செயல்படும் சிஐஏ அதிகாரியின் பெயர் குறித்த விவரங்கள் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியானது. ஆனால், அவரது பெயர் தவறாக வெளியிடப் பட்டுள்ளது என்றும், அப்பெயரை எதன் அடிப்படையில் வெளியிட்டார்கள் என்றும் அமெரிக்கத் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், சிஐஏ அதிகாரியை பாகிஸ்தானில் இருந்து திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்றும், பாக். விவகாரத்தில் அமெரிக்கா தன்னிச்சையாக செயல்படுவதாகவும் பாக். அரசு புகார் கூறியது.

ஆனால், உளவு அதிகாரியை திரும்ப அழைத்துக்கொள்ள முடியாது என்று பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments: