Wednesday, May 18, 2011

6மணி நேரம் : மின்வெட்டு இரண்டு மடங்கானது. .


சேலம் நெத்திமேடு மின்நிலையத்தில் இருந்துதான், சேலம் மாநகரின் பெரும்பான்மையான பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது.

இந்த உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தான் 6மணி நேரம் மின்வெட்டு கடந்த 16ந்தேதி முதல் அமுலில் உள்ளது.

இதேபோல் ஒவ்வொரு உட்கோட்டத்திலும் 6மணி நேரம் மின்வெட்டு கடந்த 16ந்தேதி முதல் நடைபெறுகிறது.

கடந்த ஆட்சியில் 2மணிநேர மின்வெட்டு சீராக இருந்தது. மின் பற்றாக்குறை அதிகம் இருந்த காலத்தில்கூட 3மணிநேர மின்வெட்டுதான் நடைமுறையில் இருந்தது. இதுபோல் 6மணி நேர மின்வெட்டெல்லாம் நினைத்து பார்க்காத ஒன்று. மின்வெட்டைச் சொல்லி ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான பிரச்சனை இது.

காலை 6மணி முதல் 9மணி வரை., 3மணி நேர மின்வெட்டு.

10.30மணி முதல் 11மணி வரை .,

மதியம் 2மணி முதல் 2.30மணி வரை .,

மாலை4.30மணி முதல் 5மணி வரை .,


இரவு 8.30மணி முதல் 9மணி வரை.,

இரவு 10.30மணி முதல் 11மணி வரை.,

இரவு 1.30மணி முதல் 2மணி வரை.,


இப்படி தினமும் சேலத்தில் 6மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப் படுகிறது.

மின்வெட்டை சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் சென்னையை மட்டும் மின்வெட்டு இல்லாத மாநகரமாக ஆக்கினால் போதும் என்று எண்ணுகிறார்களா?

அல்லது வீதிக்கு வீதி காவலர்களை நிறுத்தினால் போதுமானது என்று எண்ணு கிறார்கள் போலும்.

மின்வாரிய ஊழியர்களிடம் கேட்டால், உங்களுக்கு மின்சாரம் இல்லை என்ற ஒரு பிரச்சனைதான்.

ஆனால் எங்களால் பில் தரமுடியவில்லை, மக்களுக்கு மின்வெட்டிற்கான பதில் சொல்ல முடியவில்லை, எங்கள் பணிகள் எதுவும் சரிவர செய்ய முடியவில்லை, அலுவலுகத்திற்குள் புழுங்க முடிய வில்லை.

இப்படி அவர்களுடைய பிரச்சனையை நம்முன் அடுக்குகிறார்கள்.

தான் ஆட்சிப் பொறுப்பேற்ற 16-05-2011 அன்றையதினமே சங்கிலி பறிப்பு சம்பவங்கள் வெகுவாக குறைந்துவிட்டது என்றும் சங்கிலியை பறிக்கும் திருடர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். நாமும் நம்புவோம்

இது போன்ற அதிசயதக்க மாற்றம் மின்துறையில் எப்போது வரும்!!.

No comments: