Wednesday, May 18, 2011

இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கை கோள் 21-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது.

இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கை கோள் 21-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது

இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் ஜிசாட்-8 என்ற தகவல் தொடர்பு செயற்கை கோளை உருவாக்கி உள்ளனர். இதுவரை இந்தியா தனது செயற்கை கோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தி வந்தது.

இப்போது ஜி.சாட் 8 செயற்கைகோள் தென் அமெரிக்காவின் கோருவில் உள்ள பிரெஞ்ச் கயானா ராக்கெட் தளத்தில் இருந்து ஏரியான்-5 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.

இதற்காக ஜி சாட் 8 செயற்கைகோள் பிரெஞ்ச் கயானாவில் ராக்கெட்டில் பொருத்தி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வருகிற 20-ந்தேதி ராக்கெட் விண்ணில் பறப்பதாக இருந்தது.

இப்போது பல்வேறு ஆய்வு பணிகள் முடிவடையாததால் அது ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டு 21-ந்தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை கோள் 3.1 டன் எடை கொண்டது. அரசு மற்றும் தனியார் நடத்தும் டி.டி.எச். சேவைக்கான ஒளிபரப்பு கருவிகள், தகவல் தொடர்பு டிரான்ஸ் மீட்டர்கள், டிரான்ஸ் பாண்டர்கள், தானியங்கி ரிசீவர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

விண்ணில் பறந்த 30 நிமிடத்தில் செயற்கை கோள் நிலை நிறுத்தப்பட்டு கர்நாடக மாநிலம் ஹாசனில் உள்ள தரை கட்டுப்பாட்டு நிலையத்தின் உத்தரவுக்கு ஏற்ப இயங்க தொடங்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

No comments: