Wednesday, May 18, 2011

மின்பற்றாக்குறையை போக்க லோயர்கேம்ப் மின் உற்பத்தி - பொதுமக்கள் கோரிக்கை.

மின்பற்றாக்குறையை போக்க லோயர்கேம்ப் மின் உற்பத்தி பணியை விரைந்து முடிக்க வேண்டும்; கூடலூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை

கடந்த 2004-ம் ஆண்டில் முல்லை பெரியாற்றில் மின் பற்றாக்குறையை போக்கிட 17 இடங்களில் சிறுபுணல் நீர் மின் நிலையம் தொடங்கிட அடிக்கல் நாட்டப்பட்டு நான்கு இடங்களில் தொடங்கப்பட்டது.

அடுத்து வந்த அரசு ஆமை வேகத்தில் சிறுபுணல் மின் உற்பத்தி வேலைகளை செய்தது. இன்னும் 13 இடங்களில் அதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. மின் பற்றாக்குறையை பற்றி கவலையும் படவில்லை என பொதுமக்கள் கூறுகிறார்கள்.

தற்பொழுது பதவி ஏற்ற அரசு மின் பற்றாக்குறை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது. எனவே தேனி மாவட்டத்தில் காமராஜர் ஆட்சி காலத்தில் லோயர்கேம்பில் ரூ.7 கோடி செலவில், முல்லை பெரியாறு அணையிலிருந்து நான்கு ராட்சத குழாய்கள் வழியாக தமிழகத்திற்கு கொண்டு வரப்படும்.

ஆயிரத்து 200 கன அடி தண்ணீரை பயன்படுத்தி நான்கு எந்திரங்கள் மூலம் 140 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும் வகையில் பெரியாறு நீர் மின் உற்பத்தி திட்டம் தொடங்கப்பட்டது.

ஆனால் சில மாதங்களாக ஒரே ஒரு எந்திரம் மட்டுமே இயங்கி வருகிறது. அதிகாரிகளின் அலட்சிய போக்கால் இயங்காமல் வருகிறது. லோயர் கேம்பிலுள்ள பெரியாறு நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்திக்கு பிறகு ஆற்றில் விடப்படும் தண்ணீரை கொண்டு கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் சிறுபுணல் நீர் மின்நிலையம் அமைத்து ஒவ்வொரு சிறுபுணல் மின் நிலையத்திலும் 4 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க 2004-ம் ஆண்டில் தமிழக அரசு முடிவு செய்தது.

மூன்று ஆண்டுகளில் முடிக்க திட்டமிட்டு லோயர் கேம்ப், குருவனூத்துப் பாலம், காஞ்சி மரத்துறை, வெட்டுகாடு, குள்ளப்ப கவுண்டன்பட்டி, ஒத்தகளம் ஆகிய பகுதிகளில் தலா ரூ.19 கோடி செலவில் சிறுபுணல் நீர்மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து மற்ற 13 நிலையங்களும் தொடங்கப்பட்டால் 220 மெகாவாட் உற்பத்தி செய்யப்படும். இதனால் பெரும்பான்மையான மின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். மின்சாரம் பற்றாக்குறைகள் உள்ள நிலையில் விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சிறு தொழில் புரிவோர் மற்றும் சிறு விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments: