Wednesday, May 18, 2011

“நேட்டோ” ஹெலிகாப்டர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு.

“நேட்டோ” ஹெலிகாப்டர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் (பன்னாட்டு ராணுவம்) முகாமிட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் ஆத்மி காட் பகுதிக்குள் நேட்டோ படையை சேர்ந்த 2 ஹெலிகாப்டர்கள் அத்துமீறி நுழைந்து பறந்தன.

இதை கவனித்த பாகிஸ்தான் ராணுவத்தினர் அந்த ஹெலிகாப்டர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு நேட்டோ படையினரும் சுட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

அதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். இந்த தகவலை பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் வான்வெளி எல்லைக்குள் நேட்டோ ஹெலிகாப்டர்கள் பறந்ததால் அந்நாட்டு ராணுவத்தினரை ஆத்திரம் அடைய செய்துள்ளது.

No comments: