Wednesday, May 18, 2011

ஓசூர்அருகே பெங்களுர் வாலிபரிடம் ஓடும் பஸ்சில் நகை அபேஸ்.

ஓசூர்அருகே    பெங்களுர்  வாலிபரிடம்    ஓடும் பஸ்சில் நகை அபேஸ்

தான் ஆட்சிப் பொறுப்பேற்ற 16-05-2011 அன்றையதினமே சங்கிலி பறிப்பு சம்பவங்கள் வெகுவாக குறைந்துவிட்டது என்றும் சங்கிலியை பறிக்கும் திருடர்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். நாமும் நம்புவோம்!!!

கிருஷ்ணகிரி,மே,18- கர்நாடக மாநிலம் பெங்களுர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 28). இவர் தனது மனைவியுடன் பெங்களுரில் இருந்து தனியார் பஸ்சில் சேலம் புறப்பட்டு வந்து கொண்டு இருந்தார்.

ஓசூர் அருகே வந்த போது அவரது கைப்பை ஜிப் திறந்து கிடந்தது. பையில் இருந்த 35 கிராம் தங்க நகையை காணவில்லை.

இது குறித்து அவர் ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை அபேஸ் செய்து சென்றது யார் என்று விசாரித்து வருகிறார்கள்.

No comments: