
தமிழக அரசின் தலைமைச் செயலகத்தை மீண்டும் கோட்டைக்கே மாற்றுவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னையைச் சேர்ந்த ஜி. கிருஷ்ணமூர்த்தி என்னும் வழக்கறிஞர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
முந்தைய திமுக ஆட்சியில் ரூ. 1000 கோடியில் கட்டப்பட்ட கட்டடத்தை தவிர்த்துவிட்டு, மீண்டும் கோட்டைக்கே சட்டப்பேரவையையும் தலைமைச் செயலகத்தையும் மாற்றுவதை நிறுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களின் விருப்பத்தின் பேரில் மீண்டும் இடமாற்றம் செய்யப்படுகிறது.
தலைமைச் செயலகம் ஏன் மாற்றப்படுகிறது என்பது குறித்து தலைமைச் செயலர் விளக்கம் அளிக்க வேண்டும்.
பெரும் தொகையில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை புறக்கணித்துவிட்டு, தலைமைச் செயலகத்தையும் சட்டப்பேரவையையும் இடமாற்றம் செய்வது சட்டவிரோதமானது, பொது நலனுக்கு எதிரானது.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் ஜி.கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனு விபரம் :
http://vaiarulmozhi.blogspot.com/2011/05/blog-post_7895.html
இதுதொடர்பாக, சென்னையைச் சேர்ந்த ஜி. கிருஷ்ணமூர்த்தி என்னும் வழக்கறிஞர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
முந்தைய திமுக ஆட்சியில் ரூ. 1000 கோடியில் கட்டப்பட்ட கட்டடத்தை தவிர்த்துவிட்டு, மீண்டும் கோட்டைக்கே சட்டப்பேரவையையும் தலைமைச் செயலகத்தையும் மாற்றுவதை நிறுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களின் விருப்பத்தின் பேரில் மீண்டும் இடமாற்றம் செய்யப்படுகிறது.
தலைமைச் செயலகம் ஏன் மாற்றப்படுகிறது என்பது குறித்து தலைமைச் செயலர் விளக்கம் அளிக்க வேண்டும்.
பெரும் தொகையில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை புறக்கணித்துவிட்டு, தலைமைச் செயலகத்தையும் சட்டப்பேரவையையும் இடமாற்றம் செய்வது சட்டவிரோதமானது, பொது நலனுக்கு எதிரானது.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் ஜி.கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனு விபரம் :
http://vaiarulmozhi.blogspot.com/2011/05/blog-post_7895.html
No comments:
Post a Comment