Tuesday, May 17, 2011

பாகிஸ்தானில் அமெரிக்க ஏவுகணை தாக்குதல் ; 10 தீவிரவாதிகள் பலி.

பாகிஸ்தானில் அமெரிக்க ஏவுகணை தாக்குதல்; 10 தீவிரவாதிகள் பலி

பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்கொய்தா தலைவர் பின்லேடன் அமெரிக்க அதிரடி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதை தொடர்ந்து தலிபான் தீவிரவாதிகள் பதுங்கியுள்ள வசிரிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் தொடர்ந்து ஏவுகணை தாக்குதலை அதிகரித்து வருகிறது. இதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதைப்பற்றியெல்லாம் அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து தாக்கி வருகிறது.

இந்நிலையில், வடக்கு வசிரிஸ்தானில் மிரான்ஷா அருகேயுள்ள மிர்அலி நகரில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அங்கு அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் ஏவுகணைகளை வீசின.

இதைத் தொடர்ந்து தீவிரவாதிகள் பதுங்கியிருந்த அந்த கட்டிடம் இடிந்து முற்றிலும் தரைமட்டமானது. இதில், 10 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இத்தகவலை பாகிஸ்தான் டெலிவிஷன் வெளியிட்டது. அமெரிக்காவின் இத்தாக்குதல் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: