Sunday, May 15, 2011

என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதால் வாஷிங் மிஷன் - லேப்டாப் கிடைக்கும் ; புதுவை மக்கள் உற்சாகம்.

என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதால் வாஷிங் மிஷன்-லேப்டாப் கிடைக்கும்; புதுவை மக்கள் உற்சாகம்

புதுவை மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த அமோக வெற்றிக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

தேர்தலுக்கு மிக நெருக்கத்தில் என்.ஆர்.காங்கிரசின் அறிக்கை வெளியிடப்பட்டது. இதனை காங்கிரஸ் கட்சி தங்களுடைய தேர்தல் அறிக்கையை என்.ஆர்.காங்கிரஸ் காப்பி அடித்துள்ளதாக கூறியது.

என்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அனைத்து ரேசன் கார்டு களுக்கும் வாஷிங்மிஷன், மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் படிக்க செல்லும் மாணவர்களுக்கு லேப்டாப், அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் 15 கிலோ இலவச அரிசி, அரசு பணியில் ஒருவர் கூட இல்லாத குடும்பத்திற்கு அரசு பணியில் முன்னுரிமை ஆகியவை வாக்குறுதியில் இடம் பெற்றிருந்தது.

இத்துடன் முதியோர்களுக்கு ரூ.2000 பென்சன், பெண் மாற்று திறனாளிகளுக்கு மாத உதவி ரூ.3000 வரை உயர்வு, தியாகிகளுக்கு ஓய்வூதியம் ரூ.6 ஆயிரமாக உயர்வு, தாழ்த்தப்பட்ட மக்கள் வீடு கட்ட ரூ.5 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது.

ரங்கசாமி சொன்னதை செய்வார் என்ற நம்பிக்கை புதுவை மக்களிடம் உண்டு. இதனால் புதுவை மக்கள் வாஷிங்மிஷன், மாணவர்கள் லேப் டாப்பும் கிடைக்கும் என்று உற்சாகமாக உள்ளனர். கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒரு கலர் டி.வி. என அறிவித்தது.

ஆனால் ஆட்சியின் இறுதி காலம்வரை காங்கிரசால் கொடுக்க முடியவில்லை. இதேபோல் இல்லாமல் ரங்கசாமி தேர்தல் அறிக்கையை கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்ற உறுதியில் உள்ளனர்.

No comments: