Sunday, May 15, 2011

ரூ.67.50 பெட்ரோல் விலை உயர்வு துரதிஷ்டம் : ஜெயலலிதா விளக்கம்.

அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் சட்டமன்ற அ.தி.மு.க. தலைவராக ஜெயலலிதா ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவை ஜெயலலிதா சந்தித்து புதிய அரசு அமைக்க அனுமதி கோரி கடிதம் அளித்தார்.

பின்னர் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது.

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நாளை நடைபெறுகிறம் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள தேதிமுக தலைவர் விஜயகாந்துக்கு அழைப்பு விடுப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா,

‘’பதவியேற்பு விழாவுக்கு கூட்டணி கட்சிகள அனைத்துக்கும் அழைப்பு விடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

அவர் மேலும், மின்வெட்டை சீர் செய்ய முன்னுரிமை தரப்படும். பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டுள்ள பின்னடவை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

பெட்ரோல் விலை உயர்வு துரதிஷ்டம்’’ என்று ஜெயலலிதா விளக்கம் அளித்தார்.

மாநில அரசாங்கத்தின் வரியினை குறைத்து பெட்ரோல் விலையை கட்டுக்குள் கொண்டுவருவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

ஆட்சியில் இல்லாதபோது
ஜெயலலிதா அடிக்கடி இக்கருத்தை வலியுறுத்தியதையும், கருணாநிதி மாநில அரசாங்கத்தின் வரியினை குறைத்து, பெட்ரோல் விலையை ஓரளவு குறைத்ததும் நினைவுக்கு வந்து போகிறது.

நாளை விலைவாசி உயர்வுக்கும் இதே பதிலைச் சொல்லுவாரோ காக்கும் கரங்கள் புரட்சித்தலைவி.

எனவே இதனைக் கேட்டு எல்லோரும் மகிழ்ச்சியடைவோம்.


No comments: