Sunday, May 15, 2011

ஜெயலலிதா ஆசியுடன் ஆட்சி அமைப்போம் : ரங்கசாமி பேட்டி

ஜெயலலிதா ஆசியுடன் ஆட்சி அமைப்போம்:    ரங்கசாமி பேட்டி

புதுவை மாநில சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்-அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதில் 17 தொகுதிகளில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 15 இடங்களை பிடித்தது. இதில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட ரங்கசாமி 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால் என்.ஆர்.காங்கிரசின் பலம் 14 ஆக உள்ளது.

இந்த நிலையில் காரைக்கால் நிரவி-திருப்பட்டினம் தொகுதியில் இருந்து சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற வி.எம்.சி.சிவக்குமார் என்.ஆர்.காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதற்கான ஆதரவு கடிதத்தையும் ரங்கசாமியிடம் அளித்துள்ளார்.

இந்த கடிதம் கவர்னரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுயேட்சை எம்.எல்.வி.ன் ஆதரவு கிடைத்து இருப்பதால் ரங்கசாமி கட்சியான என்.ஆர்.காங்கிரசால் தனித்து ஆட்சி அமைக்க முடியும். இதனால் தனது ஆட்சியில் அ.தி.மு.க.வுக்கு பங்களிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து கவர்னர் இக்பால்சிங்கை சந்தித்து திரும்பிய ரங்கசாமியிடம் நிருபர்கள் எப்போது ஆட்சி அமைக்க போகிறீர்கள்? முதல்-அமைச்சராக எப்போது பதவி ஏற்பீர்கள்? உங்களது ஆட்சியில் அ.தி.மு.க.வுக்கு பங்கு உண்டா? ஜெயலலிதாவை எப்போது சந்திப்பீர்கள்? என பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

இந்த கேள்விகளுக்கு ரங்கசாமி பதில் அளிக்கும்போது, நேரடியாக ஆட்சியில் அ.தி.மு.க. பங்கேற்கும் என்று தெரிவிக்க வில்லை. அதற்கு பதிலாக தமிழக முதல்வர் டாக்டர் அம்மா அவர்களின் நல் ஆசியுடனும், ஆதரவுடனும் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று கூறினார். மேலும் பதவி ஏற்பதற்கான தேதியை முடிவு செய்தபின் தெரிவிப்பதாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

No comments: