Sunday, May 15, 2011

கிரிமினல் வழக்கில் சிக்கியவர்களை அமைச்சராக்கக் கூடாது : அச்சுதானந்தன் எச்சரிக்கை.


கிரிமினல், ஊழல் மற்றும் விபச்சார வழக்குகளில் தொடர்புடையவர்களை அமைச்சராக்க முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என காங்கிரசை அச்சுதானந்தன் எச்சரித்துள்ளார்.

கேரளாவில் 72 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து அச்சுதானந்தன் முதல்வர் பதவியை நேற்று ராஜினமா செய்தார். அதற்கான கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார். புதிய அமைச்சரவை பதவியேற்கும் வரை பதவியில் தொடரும்படி ஆளுநர் அவரிடம் கேட்டுக்கொண்டார்.

பின்னர் நிருபர்களிடம் அச்சுதானந்தன் கூறியதாவது,

மக்கள் தீர்ப்பை மனமுவந்து ஏற்கிறோம். நாங்கள் நினைத்தால் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுத்து மீண்டும் ஆட்சி அமைக்க முடியும். ஆனால் அது போன்ற கீழ்தரமான செயல்களில் ஈடுபட விரும்பவில்லை.

வலிமையான எதிர்கட்சியாக செயல்பட்டு மக்கள் பணியாற்றுவோம். கிரிமினல், ஊழல் மற்றும் விபச்சார வழக்குகளில் தொடர்புடையவர்களை அமைச்சராக்க காங்கிரஸ் முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். கட்சி கேட்டு கொண்டால் எதிர்கட்சி தலைவராவேன். பொலிட் பீரோவுக்கு திரும்புவது குறித்து கட்சி மேலிடம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

No comments: