Sunday, May 15, 2011

ரூ.67.50 பெட்ரோல் விலையேற்றத்தை கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம்.


பெட்ரோல் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பெட்ரோல் உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. பைக் ஒன்றிற்கு தீ வைத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பைக்கிற்கு பாடை கட்டி ஊர்வலமும் நடத்தினர்.

சுமார் அரைமணிநேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெட்ரோல் விலை உயர்வு துரதிஷ்டம்’’ என்று நாளை பதவியேற்கும் புதிய முதல்வர் ஜெயலலிதா இன்றே விளக்கம் அளித்தார்.

மாநில அரசாங்கத்தின் வரியினை குறைத்து பெட்ரோல் விலையை கட்டுக்குள் கொண்டுவருவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

ஆட்சியில் இல்லாதபோது அடிக்கடி இக்கருத்தை வலியுறுத்தியதையும், கருணாநிதி மாநில அரசாங்கத்தின் வரியினை குறைத்து, பெட்ரோல் விலையை ஓரளவு குறைத்ததும் நினைவுக்கு வந்து போகிறது.

நாளை ஏறும் விலைவாசி உயர்வுக்கும் இதே பதிலைச் சொல்லுவாரோ காக்கும் கரங்கள் புரட்சித்தலைவி.

கூடுதல் விளக்கங்களுக்கு சோ - வை அனுகலாம்.

எனவே இதனைக் கேட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் எல்லோரும் மகிழ்ச்சியடைவோம்.

No comments: