Thursday, April 28, 2011

மும்பை - உலகின் கடைசி டைப் ரைட்டர் தொழிற்சாலை மூடப்பட்டது.

மும்பையில் செயல்பட்டு வந்த உலகின் கடைசி டைப் ரைட்டர்    தொழிற்சாலை மூடப்பட்டது;    கம்ப்யூட்டர் பயன்பாட்டால் விற்பனை இல்லை

கடந்த காலங்களில் அலுவலக பணிகளில் டைப் ரைட்டர் முக்கிய பங்கு வகித்தது. இப்போது அந்த இடத்தை கம்ப்யூட்டர்கள் பிடித்து விட்டன. இதனால் டைப்ரைட்டர் தேவை குறைந்து போனது. உலகில் பல நாடுகளில் டைப்ரைட்டர் தயாரிப்பு தொழிற்சாலைகள் இயங்கி வந்தன.

ரைப்டைட்டரை வாங்க ஆள் இல்லாமல் போனதால் அந்த தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்பட்டன. கடைசியாக உலகிலேயே மும்பையில் மட்டும் ஒரே ஒரு டைப்ரைட்டர் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. கோத்ரேஜ் மற்றும் போய்சி நிறுவனம் மூலம் இந்த தொழிற்சாலை நடத்தப்பட்டு வந்தது. டைப் ரைட்டர் விற்பனை ஆகாததால் இப்போது தொழிற் சாலையை மூடி விட்டனர். கடைசியாக 500 டைப் ரைட்டரை மட்டும் உற்பத்தி செய்து விட்டு மூடி விட்டார்கள். இந்த தொழிற்சாலை 1900-ம் ஆண்டு செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

No comments: