Thursday, April 28, 2011

2ஜி ஊழலில் தொடர்புடைய இரண்டு தொலைபேசி நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் : அமலாக்கப் பிரிவு.

2ஜி ஊழலில் தொடர்புடைய இரண்டு  தொலைபேசி நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் :அமலாக்கப் பிரிவு


அமலாக்கப் பிரிவு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணையின் போது கூறிய செய்தியில் 2ஜி ஊழலில் தொடர்புடைய இரண்டு தொலைபேசி நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில் அமலாக்கப் பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், 2ஜி ஊழலில் தொடர்புடைய இரண்டு தொலைபேசி நிறுவனங்களின், 2ஜி ஊழலில் பெற்ற நாலாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கூறினார்.

மேலும் அமலாக்கப் பிரிவு 2ஜி ஊழலில் தொடர்புடைய இரண்டு தொலைபேசி நிறுவனங்களின் பெயரை வெளிபடுத்தாமல் தகவல் அடங்கிய முத்திரை இடப்பட்ட உறையை வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளிடம் அளித்தது.

No comments: