Thursday, April 28, 2011

பொழுதுபோக்கு பூங்காவில் கணவன் கண் எதிரே மனைவி கற்பழிப்பு ; 7 பேர் கும்பல் அட்டகாசம்.

பொழுதுபோக்கு பூங்காவில் கணவன் கண் எதிரே    மனைவி கற்பழிப்பு;    7 பேர் கும்பல் அட்டகாசம்

மேற்கு வங்காள மாநிலம் புருலியாவைச் சேர்ந்தவர் ஷேக்அலி. இவரது மனைவி ஷப்னம் (30). இவர்கள் இருவரும் ஜார் கண்ட் மாநிலம் ஜாம்ஷெட் பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தனர். ஜாம்ஷெட்பூரில் சுற்றுலா பொழுதுபோக்கு பூங்கா ஒன்று உள்ளது.

இதை சுற்றி பார்க்க இருவரும் சென்றிருந்தனர். பூங்காவின் ஒதுக்குபுற பகுதி ஒன்றை அவர்கள் சுற்றி பார்த்து கொண்டிருந்த போது 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. ஷேக்அலியை தாக்கி விட்டு ஷப்னத்தை மறைவான இடத்துக்கு தூக்கி சென்றனர். கணவர் கண் எதிரே ஷப்னத்தை 7 பேரும் மாறி மாறி கற்பழித்தனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இது பற்றி போலீசில் புகார் தெரிவித்தால் இருவரையும் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு சென்றனர். ஆனாலும் அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். ஷப்னத்தை போலீசார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர். மேலும் ஒருவரிடம் விசாரணை நடந்து வருகிறது. மற்றவர்களை தேடி வருகின்றனர்.

No comments: