Thursday, April 28, 2011

மும்பை தாக்குதல் : மேலும் 4 பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்பு - அமெரிக்க கோர்ட்டில் குற்றப்பத்திரிகை.

மும்பை தாக்குதல்: மேலும் 4 பாகிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்பு-  அமெரிக்க கோர்ட்டில் குற்றப்பத்திரிகை

மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் வகுத்து கொடுத்த டேவிட் ஹேட்லி, தவூர் ராணா ஆகிய தீவிரவாதிகளை அமெரிக்க போலீசார் ஏற்கனவே கைது செய்து இருந்தனர்.

இதில் தவூர் ராணா மீதான வழக்கில் அமெரிக்க போலீசார் சிகாகோ கோர்ட் டில் குற்றப்பத்திரிகை தாக் கல் செய்தனர். அதில் மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சாஜித்மிர், அபுகுபா, மசார் இக்பால், மேஜர் இக்பால் ஆகியோர் சம்பந்தப்பட்டு இருந்தனர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

மும்பை தாக்குதல் தொடர் பான திட்டங்கள் அனைத் தையும் மேஜர் இக்பால்தான் வகுத்து கொடுத் தார். அபுகுவா தொழில்நுட்ப பயிற்சி அளித்தார். டேவிட் ஹேட்லி இவர்கள் அனை வரையும் மேற்பார்வை செய்தார் என்றும் குறிப் பிடப்பட்டுள்ளது.

தகவல் இல்லை இந்த 4 தீவிரவாதிகளும் தற்போது எங்கு இருக் கிறார்கள். அவர்களை அமெரிக்க போலீசோ அல்லது மற்றவர்களோ கைது செய்து இருக்கிறார்களா? போன்ற எந்த விவரங்களும் அதில் குறிப்பிடப்படவில்லை.

தாவூர்ராணா கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த 4 பேர் பற்றிய விவரங் களையும் குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளனர்.

No comments: