Thursday, April 28, 2011

போலீஸ் பயிற்சி பள்ளியில் 11 பெண் போலீசாரை கர்ப்பமாக்கிய இன்ஸ்பெக்டர் வீடியோ படம் எடுத்து மிரட்டினார்.

போலீஸ் பயிற்சி பள்ளியில்    11 பெண் போலீசாரை    கர்ப்பமாக்கிய இன்ஸ்பெக்டர்    வீடியோ படம் எடுத்து மிரட்டினார்

மராட்டிய மாநிலம் கொல்காபூரில் போலீஸ் பயிற்சி பள்ளி உள்ளது. இங்கு புதிதாக தேர்வு பெற்ற 70 பெண் போலீசார் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அனைவருமே திருமணம் ஆகாதவர்கள். அவர்களுக்கு பயிற்சி நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இதனால் அனைத்து பெண் போலீசாருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

அதில் 11 பெண் போலீசார் கர்ப்பமாக இருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது அவர்களுக்கு பயிற்சி அளித்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராஜ் காம்ளி வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக கூறினார்கள். யுவராஜ்காம்ளியின் வீடு போலீஸ் பயிற்சி பள்ளி அருகே உள்ளது. தினமும் பெண் போலீசாரை வர வழைத்து அவர்களிடம் உறவு வைத்துள்ளார். ஆசைக்கு இணங்குபவர்களை மட்டுமே பயிற்சியில் வெற்றி பெற்றதாக அறிவிப்பேன் என மிரட்டி அனைவரையும் அவர் கற்பழித்து வந்துள்ளார்.

மேலும் அவர்களோடு உல்லாசமாக இருந்ததை வீடியோ படமும் எடுத்துள்ளார். இங்கு நடந்ததை வெளியே சொன்னால் வீடியோ படத்தை வெளியிட்டு விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார். கர்ப்பமான போலீசார் மட்டும் அல்லாமல் மேலும் ஏராளமான பெண் போலீசாரையும் அவர் கற்பழித்து இருப்பதாக தெரிகிறது.

இதையடுத்து யுவராஜ் காம்ளியை போலீசார் கைது செய்தனர். ஆனால் அவர் இதுபற்றி கூறும் போது நான் பெண் போலீஸ் யாரையும் கற்பழிக்க வில்லை. எனது உயர் அதிகாரிகள் தான் கற்பழித்து கர்ப்பமாக்கிவிட்டு என் மீது பழி போட்டு விட்டனர் என்று கூறினார்.

இந்த சம்பவம் மராட்டிய மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதுபற்றி விசாரணை நடத்த உள்துறை மந்திரி ஆர்.ஆர். பட்டீல் உத்தரவிட்டு உள்ளார். எதிர்கட்சியினர் இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

No comments: