நெய்வேலி 18-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவர் புகழேந்தி இவர் கடந்த 20 வருடமாக தி.மு.க. நகர செயலாளராக பதவி வகித்து வருகிறார். நேற்று இரவு இவர் தனக்கு சொந்தமான காரை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு யாரோ மர்ம ஆசாமிகள் காரின் பின்பக்க கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி விட்டு ஓடி விட்டனர்.
இன்று காலை கார் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தேர்தல் முடிவைத் தொடர்ந்து விஷமிகள் யாரோ இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தி.மு.க. செயலாளர் புகழேந்தியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் நெய்வேலி முழுவதும் பரவியது. தொண்டர்கள் புகழேந்தி யின் வீட்டு முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பதட்டம் உருவானது.
மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டனர். மேலும் தொ.மு.ச. அலுவலகம் மற்றும் பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
1 comment:
unga mail id kidaikkuma?
send your mail id : info.krishnastudios@gmail.com
Post a Comment