Monday, May 16, 2011

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு : டெல்லியில் பா.ஜனதா மறியல் போராட்டம்.

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: டெல்லியில் பா.ஜனதா    மறியல் போராட்டம்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து டெல்லியில் பாரதீய ஜனதா மறியல் நடத்தியது. 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இரு சக்கர வாகன ஓட்டிகள் கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டெல்லியில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாரதீய ஜனதா கட்சி மறியலில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருந்தது.

அதன்படி டெல்லியில் அக்ஷர்தாம், மோதி நகர், கான்பூர், எம்.பி. ரோடு உள்பட பல இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் பாரதீய ஜனதா தலைவர்கள் விஜய்கோயல், விஜேந்தர் குப்தா உள்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். டெல்லியில் நேற்று மாலை 5 இடங்களில் கண்டன பேரணி நடந்தது. பாரதீய ஜனதா மறியல் காரணமாக டெல்லியில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

No comments: