Monday, May 16, 2011

தி.மு.க. வேட்பாளர்களில் அதிக ஓட்டு வாங்கியவர் ஐ.பெரியசாமி குறைந்த ஓட்டில் தோற்றவர் பரிதி இளம்வழுதி.

தி.மு.க. வேட்பாளர்களில் அதிக ஓட்டு வாங்கியவர் ஐ.பெரியசாமி குறைந்த ஓட்டில் தோற்றவர் பரிதி இளம்வழுதி

சட்டசபை தேர்தலில் 2 தொகுதியில் மட்டுமே தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். 5 தொகுதியில் 20 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்திலும் 20 தொகுதியில் 5 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்திலும் 4 தொகுதியில் ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியை தக்க வைத்துக் கொண்டனர்.

திருவாரூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் கருணாநிதி அ.தி.மு.க. வேட்பாளர் குடவாசல் ராஜேந்திரனைவிட 50,224 ஓட்டு அதிகம் பெற்றுள்ளார்.

ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்ட வீட்டு வசதி வாரிய அமைச்சர் ஐ.பெரியசாமி 53,932 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார்.

மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பெரியகருப்பன் ஆகியோர் 3 ஆயிரம் ஓட்டுக்கு குறைவாகவும், மைதீன்கான் சுப.தங்கவேலன் ஆகியோர் ஆயிரம் ஓட்டுக்கு குறைவாகவும் பெற்று வெற்றி பெற்று உள்ளனர்.

மைதீன்கான் 605 ஓட்டுகளும், சுப.தங்கவேலன் 921 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தி.மு.க.வில் மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வென்றவர்களாக உள்ளனர்.

பரிதி இளம் வழுதி 202 ஓட்டும், பூங்கோதை 299 ஓட்டும் மதிவாணன் 724 ஓட்டு வித்தியாசத்திலும் தோல்வி அடைந்து உள்ளனர்.

தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் வில்லிவாக்கம் தொகுதியில் 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்திலும் பொன்முடி விழுப்புரத்தில் 12,092 ஓட்டுகள் வித்தியாசத்திலும் தோல்வியை தழுவி உள்ளனர்.

அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்றவர்கள் :

வீரபாண்டி ஆறுமுகம் 35,074 ஓட்டு வித்தியாசத்திலும்,

பொங்கலூர் பழனிசாமி 27,796 ஓட்டு வித்தியாசத்திலும்,

கே.பி.பி.சாமி 27,291 ஓட்டுகள் வித்தியாசத்திலும் தோல்வி அடைந்து உள்ளனர்.

உறவினர்களிடம் தோற்ற வீரபாண்டி ஆறுமுகம், மகன்


தமிழக சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவிய முக்கிய அமைச்சர்களில் ஒருவர் வீரபாண்டி ஆறுமுகம். அவர் சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதியில் போட்டியிட்டார். இதில் 35,079 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். வீரபாண்டி ஆறுமுகம் தனது சகோதரரின் மகளிடம் தான் தோற்றார். அ.தி.மு.க. வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயலட்சுமி பழனிச்சாமி தான் அவரது அண்ணன் மகள் ஆவார்.

விஜயலட்சுமிக்கு 1,05,502 ஓட்டுகளும், வீரபாண்டி ஆறுமுகத்துக்கு 70,423 ஓட்டுகளும் கிடைத்தன. இந்த இரண்டு குடும்பத்துக்கும் இடையே 30 ஆண்டு காலமாக அரசியல் பகை இருந்து வருகிறது. விஜயலட்சுமி 3-வது முறையாக தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். 3 முறை அமைச்சராக இருந்துள்ளார். எம்.ஜி.ஆர். ஆட்சியில் ஒரு முறையும், ஜெயலலிதா அமைச்சரவையில் 2 முறையும் மந்திரியாக இருந்துள்ளார்.

இதே போல வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜேந்திரனும் தேர்தலில் தோல்வியை சந்தித்தார். வீரபாண்டி தொகுதியில் போட்டியிட்ட அவர் 26,498 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். ராஜேந்திரன் சேலம் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.கே. செல்வத்திடம் தோற்றார். இவர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மற்றொரு சகோதரரின் மகன் ஆவார்.


No comments: