Monday, May 16, 2011

குஷ்பு அரசியலில் அனுபவம் இல்லாதவர் : நான் ஜெயலலிதாவை மதிப்பவன் : எஸ்.வி.சேகர்.


தேர்தல் முடிவுகள் தி.மு.க.வுக்கு தோல்வி அல்ல, மக்களுக்கு தான். அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. என்று நடிகை குஷ்பு கூறினார்.

இந்நிலையில் அதிமுகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்த மைலாப்பூர் தொகுதி முன்னாள் எம்எம்ஏ எஸ்.வி.சேகர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

கேள்வி: தேர்தல் முடிவு தொடர்பாக கருத்து தெரிவித்த குஷ்பு இது தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக் குத்தான் தோல்வி என்று கூறியுள்ளாரே?

பதில்: குஷ்பு அரசியலுக்கு புதுசு. அனுபவம் இல்லாதவர் மக்கள் தீர்ப்பை எப்போதும் கவுரவமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கேள்வி: சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ள நிலையில், நாம் இப்போது அ.தி.மு.க.வில் இல்லையே என்ற வருத்தம் உள்ளதா?

பதில்: நான் எப்போதும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையும் தி.மு.க. தலைவர் கருணாநிதியையும் மதிப்பவன். 2 பேருமே எனக்கு நண்பர்கள். டெல்லியில் உள்ள தலைவர்கள் அரசியல் பகையை மறந்து நண்பர்களாக இருப்பது போல, நானும் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அ.தி.மு.க.வில் இருந்து நான் வெளியேறவில்லை வெளியேற்றப்பட்டேன். தற்போது அதற்காக வருத்தப் படவில்லை என்றார்.

No comments: